என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருச்சி கலெக்டர், போலீஸ் அதிகாரிகளுக்கு கொரோனா பரிசோதனை
Byமாலை மலர்24 Jun 2020 9:00 AM GMT (Updated: 24 Jun 2020 9:00 AM GMT)
முதல்-அமைச்சரின் ஆய்வு கூட்டத்தில் பங்கேற்க உள்ள திருச்சி மாவட்ட கலெக்டர், போலீஸ் ஐ.ஜி. உள்ளிட்ட அதிகாரிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
திருச்சி:
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) திருச்சி வருகிறார். அன்று காலை 10 மணிக்கு திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி பணிகள் மற்றும் கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பான ஆய்வு கூட்டத்தில் முதல்-அமைச்சர் பங்கேற்கிறார். பின்னர் திருச்சி அருகே உள்ள முக்கொம்பிற்கு சென்று அங்கு கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்படும் புதிய கதவணை கட்டுமான பணியை பார்வையிடுகிறார்.
முதல்-அமைச்சரின் ஆய்வு கூட்டத்தில் பங்கேற்க உள்ள அதிகாரிகளுக்கு நேற்று திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் சுகாதார துறை அதிகாரிகளால் கொரோனா தொற்று உள்ளதா? என அவர்களது சளி மாதிரிகள் எடுத்து பரிசோதனை செய்யப்பட்டது. மாவட்ட கலெக்டர் சிவராசுவிற்கும் பரிசோதனை செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி.அமல்ராஜ், திருச்சி சரக போலீஸ் டி.ஐ.ஜி. பாலகிருஷ்ணன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல் ஹக், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் வனிதா மற்றும் பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட அனைத்துத்துறை அதிகாரிகளுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனை முடிவில் கொரோனா தொற்று இல்லை என மருத்துவ சான்றிதழ் பெறப்படும் அதிகாரிகள் மட்டுமே முதல் -அமைச்சருடனான ஆய்வு கூட்டத்தில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள் என தெரிகிறது.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) திருச்சி வருகிறார். அன்று காலை 10 மணிக்கு திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி பணிகள் மற்றும் கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பான ஆய்வு கூட்டத்தில் முதல்-அமைச்சர் பங்கேற்கிறார். பின்னர் திருச்சி அருகே உள்ள முக்கொம்பிற்கு சென்று அங்கு கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்படும் புதிய கதவணை கட்டுமான பணியை பார்வையிடுகிறார்.
முதல்-அமைச்சரின் ஆய்வு கூட்டத்தில் பங்கேற்க உள்ள அதிகாரிகளுக்கு நேற்று திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் சுகாதார துறை அதிகாரிகளால் கொரோனா தொற்று உள்ளதா? என அவர்களது சளி மாதிரிகள் எடுத்து பரிசோதனை செய்யப்பட்டது. மாவட்ட கலெக்டர் சிவராசுவிற்கும் பரிசோதனை செய்யப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X