என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மாலத்தீவில் சிக்கி தவித்த 198 தமிழர்கள் கடற்படை கப்பலில் தூத்துக்குடி வந்தனர்
Byமாலை மலர்24 Jun 2020 8:38 AM GMT (Updated: 24 Jun 2020 8:38 AM GMT)
மாலத்தீவில் சிக்கி தவித்த 198 தமிழர்கள் மீட்கப்பட்டு கடற்படை கப்பலில் தூத்துக்குடிக்கு அழைத்து வரப்பட்டனர்.
தூத்துக்குடி:
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கால் பல்வேறு வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்கள் ‘ஆபரேசன் சமுத்திர சேது‘ திட்டத்தின் கீழ் இந்தியாவுக்கு அழைத்து வரப்படுகின்றனர்.
அவ்வாறு இலங்கையில் இருந்து 713 இந்தியர்கள் கடந்த 2-ந் தேதியும், மாலத்தீவில் இருந்து 700 இந்தியர்கள் கடந்த 7-ந் தேதியும் இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘ஐ.என்.எஸ். ஜலஸ்வா‘ கப்பல் மூலம் தூத்துக்குடிக்கு அழைத்து வரப்பட்டனர்.
இதன் தொடர்ச்சியாக மாலத்தீவில் சிக்கியிருந்த மேலும் 198 இந்தியர்கள் மீட்கப்பட்டு கடற்படைக்கு சொந்தமான ‘ஐ.என்.எஸ். ஐராவத்‘ என்ற கப்பல் மூலம் நேற்று தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்துக்கு அழைத்து வரப்பட்டனர். மாலத்தீவில் உள்ள மாலே துறைமுகத்தில் இருந்து கடந்த 21-ந் தேதி மதியம் 2 மணிக்கு புறப்பட்ட இந்த கப்பல் நேற்று அதிகாலை 2 மணியளவில் தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தை வந்தடைந்தது. தொடர்ந்து கப்பலில் வந்த இந்தியர்கள் காலை 7 மணிக்கு பலத்த பாதுகாப்புடன் கீழே இறக்கப்பட்டனர்.
இந்த கப்பலில் வந்த அனைவரும் தமிழர்கள். இவர்களில் 195 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். 3 பேர் மட்டும் புதுச்சேரியை சேர்ந்தவர்கள். இவர்களில் ஆண்கள் 188 பேர், பெண்கள் 7 பேர், ஆண் குழந்தைகள் 3 பேர் ஆவர். தமிழகத்தை சேர்ந்தவர்களை பொறுத்தவரை அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் 64 பேரும், தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தலா 5 பேரும், தென்காசி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் 4 பேரும் ஆவர். கப்பலில் வந்தவர்களை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி, போலீஸ் சூப்பிரண்டு அருண் பாலகோபாலன், துறைமுக பொறுப்புக்கழக தலைவர் ராமச்சந்திரன், துணைத்தலைவர் பிமல்குமார் ஜா, உள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்றனர்.
கப்பலில் இருந்து இறங்கியவுடன் அனைவருக்கும் கொரோனா அறிகுறிகள் இருக்கிறதா? என மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் அனைவரும் பஸ்களில் பயணிகள் முனையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு சுங்க மற்றும் குடியுரிமை சோதனை முடிந்ததும் அரசு பஸ்கள் மூலம் அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதன் தொடர்ச்சியாக வருகிற 28-ந் தேதி ஈரானில் இருந்து ஒரு கப்பல் தூத்துக்குடி வருகிறது. இந்த கப்பலில் அந்நாட்டில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்கள் அழைத்து வரப்பட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கால் பல்வேறு வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்கள் ‘ஆபரேசன் சமுத்திர சேது‘ திட்டத்தின் கீழ் இந்தியாவுக்கு அழைத்து வரப்படுகின்றனர்.
அவ்வாறு இலங்கையில் இருந்து 713 இந்தியர்கள் கடந்த 2-ந் தேதியும், மாலத்தீவில் இருந்து 700 இந்தியர்கள் கடந்த 7-ந் தேதியும் இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘ஐ.என்.எஸ். ஜலஸ்வா‘ கப்பல் மூலம் தூத்துக்குடிக்கு அழைத்து வரப்பட்டனர்.
இதன் தொடர்ச்சியாக மாலத்தீவில் சிக்கியிருந்த மேலும் 198 இந்தியர்கள் மீட்கப்பட்டு கடற்படைக்கு சொந்தமான ‘ஐ.என்.எஸ். ஐராவத்‘ என்ற கப்பல் மூலம் நேற்று தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்துக்கு அழைத்து வரப்பட்டனர். மாலத்தீவில் உள்ள மாலே துறைமுகத்தில் இருந்து கடந்த 21-ந் தேதி மதியம் 2 மணிக்கு புறப்பட்ட இந்த கப்பல் நேற்று அதிகாலை 2 மணியளவில் தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தை வந்தடைந்தது. தொடர்ந்து கப்பலில் வந்த இந்தியர்கள் காலை 7 மணிக்கு பலத்த பாதுகாப்புடன் கீழே இறக்கப்பட்டனர்.
இந்த கப்பலில் வந்த அனைவரும் தமிழர்கள். இவர்களில் 195 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். 3 பேர் மட்டும் புதுச்சேரியை சேர்ந்தவர்கள். இவர்களில் ஆண்கள் 188 பேர், பெண்கள் 7 பேர், ஆண் குழந்தைகள் 3 பேர் ஆவர். தமிழகத்தை சேர்ந்தவர்களை பொறுத்தவரை அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் 64 பேரும், தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தலா 5 பேரும், தென்காசி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் 4 பேரும் ஆவர். கப்பலில் வந்தவர்களை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி, போலீஸ் சூப்பிரண்டு அருண் பாலகோபாலன், துறைமுக பொறுப்புக்கழக தலைவர் ராமச்சந்திரன், துணைத்தலைவர் பிமல்குமார் ஜா, உள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்றனர்.
கப்பலில் இருந்து இறங்கியவுடன் அனைவருக்கும் கொரோனா அறிகுறிகள் இருக்கிறதா? என மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் அனைவரும் பஸ்களில் பயணிகள் முனையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு சுங்க மற்றும் குடியுரிமை சோதனை முடிந்ததும் அரசு பஸ்கள் மூலம் அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதன் தொடர்ச்சியாக வருகிற 28-ந் தேதி ஈரானில் இருந்து ஒரு கப்பல் தூத்துக்குடி வருகிறது. இந்த கப்பலில் அந்நாட்டில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்கள் அழைத்து வரப்பட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X