என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 2,800 கனஅடியாக அதிகரிப்பு
Byமாலை மலர்23 Jun 2020 10:18 AM GMT (Updated: 23 Jun 2020 10:18 AM GMT)
தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 2,800 கனஅடியாக அதிகரித்தது. இதனால் மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
தர்மபுரி:
காவிரி மேலாண்மை வாரிய உத்தரவுப்படி தமிழகத்திற்கு மாத வாரியாக கர்நாடகம் திறக்க வேண்டிய தண்ணீரை வழங்க கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதாலும், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் ஆங்காங்கே பெய்த மழை காரணமாகவும் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்தை கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து நேற்று முன்தினம் வினாடிக்கு 1,500 கன அடியாக இருந்தது. இந்த நீர்வரத்து நேற்று வினாடிக்கு 2,800 கனஅடியாக அதிகரித்தது. இதனால் மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. கடந்த 15 நாட்களாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சற்று கூடுவதும், பின்னர் குறைவதும் வழக்கமாக உள்ளது.
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்தை கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X