search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    மணல் கடத்திய வாலிபர் கைது- தப்பி ஓடிய டிரைவருக்கு வலைவீச்சு

    சிப்காட் அருகே மணல் கடத்திய வாலிபரை கைது செய்த போலீசார், தப்பி ஓடிய டிரைவரை தேடி வருகின்றனர்.
    சிப்காட் (ராணிப்பேட்டை):

    சிப்காட் போலீசார் வசூர் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த டிராக்டரை மடக்கியபோது டிராக்டர் நிற்காமல் சென்றது.

    இதனையடுத்து டிராக்டர் டிரைவர் சிறிது தூரம் சென்றவுடன் டிராக்டரை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். டிராக்டரில் அதன் உரிமையாளர் கோடியூர் பகுதியை சேர்ந்த ரமேஷ் (வயது 30) என்பவர் இருந்தார். அதைத் தொடர்ந்து போலீசார் டிராக்டரை சோதனை செய்தபோது பொன்னை ஆற்றில் இருந்து டிராக்டரில் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து டிராக்டர் உரிமையாளர் ரமேசை கைது செய்து, டிராக்டரை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய டிராக்டர் டிரைவர் வசூரை அடுத்துள்ள கொளத்தூர் பகுதியை சேர்ந்த சத்தியாவை வலைவீசி தேடி வருகின்றனர்.
    Next Story
    ×