search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை ஐகோர்ட்
    X
    சென்னை ஐகோர்ட்

    ஆன்லைன் வகுப்புக்கு தடைகோரிய வழக்கு- கண் மருத்துவமனை டீனுக்கு ஐகோர்ட் உத்தரவு

    ஆன்லைன் வழியில் பாடம் படிக்கும் மாணவர்கள் தொடர்ந்து செல்போன்களை பார்ப்பதால் பாதிப்பு ஏற்படுமா? என்று பதில் அளிக்க கண் மருத்துவமனை டீனுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    கொரோனா வைரஸ் பாதிப்பால் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கால் மாணவர்களின் கற்றல் திறனில் தொய்வு ஏற்படாமல் இருக்க தனியார் பள்ளிகள் ஆன்லைன் வழிக் கற்றலை நடத்தி வருகிறது.

    இந்நிலையில் ஒரு நாளைக்கு 2 மணிநேரத்திற்கு மேல் ஆன்லைன் வகுப்பு நடத்த தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இன்று வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஆன்லைன் வழியில் பாடம் படிக்கும் மாணவர்கள் தொடர்ந்து செல்போன்களை பார்ப்பதால் பாதிப்பு ஏற்படுமா? என கேள்வி எழுப்பினர்.

    மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய கண் மருத்துவமனை டீனுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். 
    Next Story
    ×