search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தொழிலாளி தற்கொலை
    X
    தொழிலாளி தற்கொலை

    ராயக்கோட்டை அருகே தொழிலாளி தற்கொலை

    ராயக்கோட்டை அருகே தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ராயக்கோட்டை:

    ராயக்கோட்டை அருகே உள்ள உடையாண்டஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 37). கூலி தொழிலாளி. இவரது மனைவி கடந்த 10 வருடங்களுக்கு முன்பு உடல் நலக் குறைவால் உயிரிழந்தார். மனைவி இறந்த துக்கம் தாங்காமல் மூர்த்தி சரியாக சாப்பிடாமலும், வேலைக்கு செல்லாமலும் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று மூர்த்தி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ராயக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கமலேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    Next Story
    ×