என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பறிக்கப்பட்ட உயிர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும்- மு.க.ஸ்டாலின்
Byமாலை மலர்23 Jun 2020 7:41 AM GMT (Updated: 23 Jun 2020 7:41 AM GMT)
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சிறையில் தந்தை, மகன் உயிரிழந்துள்ள சம்பவத்துக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை:
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிளை சிறையில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை, மகன் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தை கண்டித்து உறவினர்கள், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இச்சம்பவத்திற்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கூறியுள்ளதாவது:-
சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ்- அவரது மகன் பென்னிக்ஸ் இருவரையும் கடந்த 19-ம் தேதி காவல்துறையினர் அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.
22-ம் தேதி நெஞ்சுவலியால் மயங்கி விழுந்தார் என்று கோவில்பட்டி மருத்துவமனையில் மகன் பென்னிக்ஸ் சேர்க்கப்பட்ட போதே அவர் இறந்திருக்கிறார். பிறகு தந்தை ஜெயராஜூம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட, அவரும் இறந்துவிட்டார்.
காவலர்களால் மிகக்கடுமையாகத் தாக்கப்பட்டதால் தான் மரணம் அடைந்தார்கள் என்று அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்.
கொரோனா பேரழிவை உருவாக்கி வரும் நெருக்கடியில் வாய்த்தகராறு காரணமாக, தந்தை-மகன் என இரண்டு உயிர்களை பறிக்கும் அளவுக்கு காவல்துறை நடந்து கொள்கிறது என்றால், இது திரைமறைவு போலீஸ் ஆட்சியா?
உள்துறையைக் கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் இதற்கு உரிய பதிலளிக்க வேண்டும். மரணத்துக்குக் காரணமானவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும். பறிக்கப்பட்ட உயிர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும்! எப்போது கிடைக்கும் தீர்வு?
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிளை சிறையில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை, மகன் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தை கண்டித்து உறவினர்கள், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இச்சம்பவத்திற்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கூறியுள்ளதாவது:-
சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ்- அவரது மகன் பென்னிக்ஸ் இருவரையும் கடந்த 19-ம் தேதி காவல்துறையினர் அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.
22-ம் தேதி நெஞ்சுவலியால் மயங்கி விழுந்தார் என்று கோவில்பட்டி மருத்துவமனையில் மகன் பென்னிக்ஸ் சேர்க்கப்பட்ட போதே அவர் இறந்திருக்கிறார். பிறகு தந்தை ஜெயராஜூம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட, அவரும் இறந்துவிட்டார்.
காவலர்களால் மிகக்கடுமையாகத் தாக்கப்பட்டதால் தான் மரணம் அடைந்தார்கள் என்று அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்.
கொரோனா பேரழிவை உருவாக்கி வரும் நெருக்கடியில் வாய்த்தகராறு காரணமாக, தந்தை-மகன் என இரண்டு உயிர்களை பறிக்கும் அளவுக்கு காவல்துறை நடந்து கொள்கிறது என்றால், இது திரைமறைவு போலீஸ் ஆட்சியா?
உள்துறையைக் கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் இதற்கு உரிய பதிலளிக்க வேண்டும். மரணத்துக்குக் காரணமானவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும். பறிக்கப்பட்ட உயிர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும்! எப்போது கிடைக்கும் தீர்வு?
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X