என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புதிய உச்சம்- 17 நாட்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 7.50 ரூபாய் உயர்வு
Byமாலை மலர்23 Jun 2020 3:42 AM GMT (Updated: 23 Jun 2020 3:42 AM GMT)
சென்னையில் 17 நாட்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 7.50 ரூபாய் மற்றும் டீசல் லிட்டருக்கு 8.55 ரூபாய் உயர்ந்துள்ளது.
சென்னை:
சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலையை தினந்தோறும் எண்ணெய் நிறுவனங்கள் மாற்றிமைத்து வருகின்றன. ஊரடங்கின் காரணமாக பெட்ரோல், டீசலின் தேவை குறைந்ததால் எண்ணெய் நிறுவனங்கள் 82 நாட்கள் விலையை குறைக்காமல் இருந்தன.
82 நாட்களுக்கு பிறகு கடந்த 7-ம் தேதி பெட்ரோல், டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டது. அப்போது முதல் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வருகின்றன. 17வது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
சென்னையில் இன்று, பெட்ரோல் 17 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் 83.04 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை 47 காசுகள் அதிகரித்து 76.77 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இந்த விலை உயர்வு இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.
17 நாட்களில் சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 7.50 ரூபாய் மற்றும் டீசல் லிட்டருக்கு 8.55 ரூபாய் விலை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 20 காசுகள் உயர்ந்து ரூ.79.76 ஆகவும், டீசல் விலை 55 காசுகள் உயர்ந்து ரூ.79.40 ஆகவும் விற்பனை ஆகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X