search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழ்நாடு குடிசைகள் மாற்று வாரியத்தின் மூலம் கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்புகள்
    X
    தமிழ்நாடு குடிசைகள் மாற்று வாரியத்தின் மூலம் கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்புகள்

    பாரத பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின்படி வீடுகள் வழங்க கட்டுமான பணிகள் தீவிரம்

    பாரத பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின்படி புலியூர் பேரூராட்சிக்குட்பட்ட வெள்ளாளப்பட்டி பகுதியில் தமிழ்நாடு குடிசைகள் மாற்று வாரியத்தின் மூலம் 88 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
    வெள்ளியணை:

    பாரத பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் வீடற்ற ஏழைகளுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி கொடுக்கப்படுகின்றன. அதன்படி கரூர் மாவட்டத்தில் இத்திட்டத்தின்கீழ் பல அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக புலியூர் பேரூராட்சிக்குட்பட்ட வெள்ளாளப்பட்டி பகுதியில் தமிழ்நாடு குடிசைகள் மாற்று வாரியத்தின் மூலம் 88 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த வீடுகள் கரூர் நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் வசிக்கும் வீடற்ற ஏழைகள் மற்றும் அரசு நிலங்களை ஆக்கிரமித்து குடிசை அமைத்து வாழ்ந்து வரும் ஏழை மக்களுக்கு வழங்கப்பட உள்ளது.
    Next Story
    ×