என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சாணார்பட்டி அருகே ஆட்டோ கவிழ்ந்து தொழிலாளி பலி
Byமாலை மலர்22 Jun 2020 3:09 PM GMT (Updated: 22 Jun 2020 3:09 PM GMT)
சாணார்பட்டி அருகே கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் தொழிலாளி பலியானார்.
கோபால்பட்டி:
சாணார்பட்டி அருகே உள்ள வி.குரும்பபட்டியை சேர்ந்த மூக்கன் மகன் யுவராஜ் (வயது 18). இவர் விவசாய கூலித்தொழிலாளியாக வேலை செய்து வந்தார். யுவராஜ் நேற்று மதியம் வி.குரும்பபட்டியில் உள்ள ஒரு தோட்டத்தில் மாங்காய் பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது மாங்காய்களை ஏற்றிச்செல்ல வந்த ஆட்டோவை யுவராஜ் ஓட்டி பழகினார். சிறிது தூரம் சென்றதும் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் யுவராஜ் பலத்த காயமடைந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி யுவராஜ் உயிரிழந்தார். இதுகுறித்து சாணார்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாணார்பட்டி அருகே உள்ள வி.குரும்பபட்டியை சேர்ந்த மூக்கன் மகன் யுவராஜ் (வயது 18). இவர் விவசாய கூலித்தொழிலாளியாக வேலை செய்து வந்தார். யுவராஜ் நேற்று மதியம் வி.குரும்பபட்டியில் உள்ள ஒரு தோட்டத்தில் மாங்காய் பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது மாங்காய்களை ஏற்றிச்செல்ல வந்த ஆட்டோவை யுவராஜ் ஓட்டி பழகினார். சிறிது தூரம் சென்றதும் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் யுவராஜ் பலத்த காயமடைந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி யுவராஜ் உயிரிழந்தார். இதுகுறித்து சாணார்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X