search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    சாணார்பட்டி அருகே ஆட்டோ கவிழ்ந்து தொழிலாளி பலி

    சாணார்பட்டி அருகே கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் தொழிலாளி பலியானார்.
    கோபால்பட்டி:

    சாணார்பட்டி அருகே உள்ள வி.குரும்பபட்டியை சேர்ந்த மூக்கன் மகன் யுவராஜ் (வயது 18). இவர் விவசாய கூலித்தொழிலாளியாக வேலை செய்து வந்தார். யுவராஜ் நேற்று மதியம் வி.குரும்பபட்டியில் உள்ள ஒரு தோட்டத்தில் மாங்காய் பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது மாங்காய்களை ஏற்றிச்செல்ல வந்த ஆட்டோவை யுவராஜ் ஓட்டி பழகினார். சிறிது தூரம் சென்றதும் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இதில் யுவராஜ் பலத்த காயமடைந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி யுவராஜ் உயிரிழந்தார். இதுகுறித்து சாணார்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×