search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இளம்பெண் தற்கொலை
    X
    இளம்பெண் தற்கொலை

    சேந்தமங்கலத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

    சேந்தமங்கலத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சேந்தமங்கலம்:

    சேந்தமங்கலம் பேரூராட்சி காமராஜபுரத்தை சேர்ந்தவர் கோகுல் (வயது 21). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி நந்தினி (21). இவர்களுக்கு திருமணமாகி ஒரு ஆண்டு ஆகிறது. குழந்தை இல்லை. இதனால் நந்தினி மன வருத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

    இந்தநிலையில் நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்த நந்தினி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சேந்தமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணமான ஒரு ஆண்டிலேயே இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதால் இதுதொடர்பாக உதவி கலெக்டர் கோட்டைக்குமாரும் விசாரணை நடத்தி வருகிறார்.
    Next Story
    ×