search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின்சாரம் நிறுத்தம்
    X
    மின்சாரம் நிறுத்தம்

    சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூரில் நாளை மின்சாரம் நிறுத்தம்

    சிவகாசி மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் நாளை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.
    ராஜபாளையம்:

    மல்லாங்கிணறு பகுதியில் உள்ள அழகியநல்லூர், மேலதுலுக்கன்குளம், சோலைகவுன்டன்பட்டி, கெப்பிலிங்கம்பட்டி பகுதிகளில் பராமரிப்பு பணி காரணமாக நாளை(செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வினியோகம் இருக்காது என மின்வாரிய நிர்வாக என்ஜினீயர் அகிலாண்டேஸ்வரி கூறினார்.

    ராஜபாளையம் நகர் கிழக்கு பகுதியில் உள்ள துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. ஆதலால் பி.எஸ்.கே.நகர், அழகை நகர், தெற்கு மலையடிப்பட்டி, சங்கரன்கோவில் முக்கு, தென்காசி ரோடு, அரசு மருத்துவமனை, புதிய பஸ் நிலையம், பாரதி நகர், ஆர்.ஆர்.நகர், சமுசிகபுரம், சத்திரப்பட்டி, எஸ்.ராமலிங்கபுரம், கலங்கபேரி புதூர், மொட்டமலை ஆகிய இடங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை செயற்பொறியாளர் (பொறுப்பு) பூபேஷ் கூறினார்.

    அதேபோல ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் துணைமின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடைபெறுகிறது. ஆதலால் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர், குட்டதட்டி, சித்தாலம்புத்தூர், வெங்கடேஸ்வரபுரம் ஆகிய பகுதிகளில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை ஸ்ரீவில்லிபுத்தூர் கோட்ட செயற்பொறியாளர் சுடலையாடும்பெருமாள் கூறினார்.

    சிவகாசி கோட்டத்தில் உள்ள பாரைப்பட்டி, சிவகாசி அர்பன் ஆகிய துணை மின் நிலையத்தில் நாளை காலை 10 மணி முதல் மாலை 4 மணிவரை பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. ஆதலால் பாரைப்பட்டி, பள்ளப்பட்டி, விஸ்வநத்தம், மாரியம்மன்கோவில், ஜக்கம்மாள் கோவில், நாரணாபுரம் ரோடு, சிவகாசி பஸ்நிலையம், கண்ணாநகர், காரனேசன் காலனி, பழனியாண்டவர் காலனி, நேருரோடு, பராசக்தி காலனி, வடக்குரதவீதி, வேலாயுதம் ரஸ்தா, அண்ணாகாலனி ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது என மின்வாரியஅதிகாரி முரளிதரன் கூறினார்.
    Next Story
    ×