search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெட்ரோல், டீசல் விலை
    X
    பெட்ரோல், டீசல் விலை

    கடந்த 2 வாரங்களில் பெட்ரோல், டீசல் விலை தலா ரூ.7 உயர்வு

    கடந்த 2 வாரங்களில் தொடர்ந்து விலை உயர்வை சந்தித்துவரும் பெட்ரோல் மற்றும் டீசல் லிட்டருக்கு தலா ரூ.7 உயர்ந்து இருக்கிறது குறிப்பிடத்தக்கது.
    சென்னை :

    பெட்ரோல், டீசலை பொறுத்தவரையில் கொரோனா ஊரடங்கு தொடங்குவதற்கு முன்பு வரை விலை உயர்வு இருந்தநிலையில், அதன்பிறகு விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்து வந்தது. அதன்பின், 82 நாட்களுக்கு பிறகு, கடந்த 7-ந்தேதி பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் திடீரென உயர்த்தின. அதன் தொடர்ச்சியாக விலை அதிகரித்த வண்ணமே இருக்கிறது. நேற்றும் விலை உயர்ந்து காணப்பட்டது.

    நேற்று பெட்ரோல் லிட்டருக்கு 31 காசு உயர்ந்து, ஒரு லிட்டர் 82 ரூபாய் 58 காசுக்கும், டீசல் லிட்டருக்கு 51 காசு அதிகரித்து, ஒரு லிட்டர் 75 ரூபாய் 80 காசுக்கும் விற்பனை ஆனது. கடந்த 2 வாரங்களில் தொடர்ந்து விலை உயர்வை சந்தித்துவரும் பெட்ரோல் மற்றும் டீசல் லிட்டருக்கு தலா ரூ.7 உயர்ந்து இருக்கிறது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×