என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பள்ளிப்பட்டு பேரூராட்சி துப்புரவு தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
Byமாலை மலர்21 Jun 2020 8:30 AM GMT (Updated: 21 Jun 2020 8:30 AM GMT)
துப்புரவு தொழிலாளி ஆஸ்துமா நோயால் பாதிப்படைந்த நிலையில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
பள்ளிப்பட்டு:
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே உள்ள ஈச்சம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 48). இவர் பள்ளிப்பட்டு பேரூராட்சியில் துப்புரவு தொழிலாளியாக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் அவர், வழக்கம்போல துப்புரவு பணிக்கு சென்றார். காலை நேரப்பணி முடிந்ததும் வீட்டிற்கு சென்று உணவருந்தி விட்டு, மதியம் அலுவலகம் சென்று அலுவலக வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டார்.
அதன் பின்னர், கொசஸ்தலை ஆற்றங்கரைக்கு அருகே உள்ள குப்பை கிடங்கிற்கு சென்ற அவர், திடீரென தான் வைத்திருந்த விஷத்தை குடித்து மயங்கி விழுந்தார். இதை கண்ட அங்கிருந்தவர்கள், வேல்முருகனை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியில் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
போலீஸ் விசாரணையில், துப்புரவு பணியாளர் வேல்முருகன் கடந்த சில ஆண்டுகளாக ஆஸ்துமா நோயால் அவதிப்பட்டு வந்ததும், இதனால் கடந்த சில நாட்களாக மனமுடைந்து காணப்பட்ட அவர், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. இறந்த வேல்முருகனுக்கு ஜெயந்தி (40), என்ற மனைவியும், இளவரசி(22) என்ற மகளும், கேசவன்(19), பிரதாப் (18) என்ற மகன்களும் உள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே உள்ள ஈச்சம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 48). இவர் பள்ளிப்பட்டு பேரூராட்சியில் துப்புரவு தொழிலாளியாக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் அவர், வழக்கம்போல துப்புரவு பணிக்கு சென்றார். காலை நேரப்பணி முடிந்ததும் வீட்டிற்கு சென்று உணவருந்தி விட்டு, மதியம் அலுவலகம் சென்று அலுவலக வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டார்.
அதன் பின்னர், கொசஸ்தலை ஆற்றங்கரைக்கு அருகே உள்ள குப்பை கிடங்கிற்கு சென்ற அவர், திடீரென தான் வைத்திருந்த விஷத்தை குடித்து மயங்கி விழுந்தார். இதை கண்ட அங்கிருந்தவர்கள், வேல்முருகனை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியில் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
போலீஸ் விசாரணையில், துப்புரவு பணியாளர் வேல்முருகன் கடந்த சில ஆண்டுகளாக ஆஸ்துமா நோயால் அவதிப்பட்டு வந்ததும், இதனால் கடந்த சில நாட்களாக மனமுடைந்து காணப்பட்ட அவர், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. இறந்த வேல்முருகனுக்கு ஜெயந்தி (40), என்ற மனைவியும், இளவரசி(22) என்ற மகளும், கேசவன்(19), பிரதாப் (18) என்ற மகன்களும் உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X