search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    மது குடித்ததை மனைவி கண்டித்ததால் கொத்தனார் தற்கொலை

    குளச்சல் அருகே மது குடித்ததை மனைவி கண்டித்ததால் கொத்தனார் தற்கொலை செய்து கொண்டார்.
    குளச்சல்:

    குளச்சல் அருகே நீர்வக்குழி பகுதியை சேர்ந்தவர் தேவதாசன் (வயது 55), கொத்தனார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதை அவருடைய மனைவி கண்டித்து வந்தார். இதனால், கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    இதனால் மனமுடைந்த தேவதாசன் வீட்டில் விஷம் மாத்திரைகளை தின்று மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தேவதாசன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
    Next Story
    ×