search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின்சாரம் தாக்கி பலி
    X
    மின்சாரம் தாக்கி பலி

    அரக்கோணம் அருகே மின்சாரம் தாக்கி டிரைவர் பலி

    அரக்கோணம் அருகே மின்சாரம் தாக்கி டிரைவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அரக்கோணம்:

    அரக்கோணம் அருகே உள்ள திருமாதலம்பாக்கம் கிராமம், சின்னத்தெருவை சேர்ந்தவர் சேட்டு (வயது 45), தனியார் பஸ் டிரைவர். நேற்று பிற்பகல் இவரது வீட்டில் மின்சாரம் இல்லை. இதனால் அவர் மின்வயர்களை சரிபார்த்து உள்ளார். அப்போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். உடனே அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து தக்கோலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசலு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மின்சாரம் தாக்கி இறந்த சேட்டுவுக்கு லதா (40) என்ற மனைவி, கஜலட்சுமி (12) என்ற மகளும், ராஜேஷ் (11) என்ற மகனும் உள்ளனர்.
    Next Story
    ×