search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாலிபர் தற்கொலை
    X
    வாலிபர் தற்கொலை

    காரிமங்கலம், தொப்பூர் பகுதியில் வாலிபர் உள்பட 2 பேர் தற்கொலை

    காரிமங்கலம், தொப்பூர் பகுதியில் வாலிபர் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காரிமங்கலம்:

    தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள திண்டல் ஊராட்சி ஒடசக்கரை பகுதியை சேர்ந்தவர் பழனி. இவருடைய மகன் ரமேஷ்(வயது 23). இவர் ஓசூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். சமீப காலமாக இவர் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். இந்தநிலையில் நேற்று காலை ரமேஷ் விஷம் குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார்.

    இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள், அவரை மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தொப்பூர் அருகே உள்ள மண்ணுகுழி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (37) தொழிலாளி. இவருக்கு திருமணமாகி ரம்யா என்ற மனைவியும், குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில் சுரேஷ் தொப்பூர் வனப்பகுதியில் உள்ள ஒரு மரத்தில் நேற்று தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். அந்த வழியாக சென்றவர்கள் உயிருக்கு போராடிய அவரை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது சுரேஷ் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது.

    தொழிலாளி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×