search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெட்ரோல் பங்க்
    X
    பெட்ரோல் பங்க்

    14-வது நாளாக விலை உயர்வு- சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.82.27

    கடந்த 14 நாட்களில் சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 6.73 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 7.07 ரூபாயும் உயர்ந்துள்ளது.
    சென்னை:

    சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலையை தினந்தோறும் எண்ணெய் நிறுவனங்கள் மாற்றிமைத்து வருகின்றன. ஆனால், ஊரடங்கின் காரணமாக பெட்ரோல், டீசலின் தேவை குறைந்ததால் எண்ணெய் நிறுவனங்கள் விலையில் எந்த மாற்றமும் செய்யாமல் இருந்தன. கச்சா எண்ணெய் விலை பெருமளவில் வீழ்ச்சி அடைந்த போதும் விலை குறைக்கப்படவில்லை.

    82 நாட்களுக்கு பிறகு கடந்த 7-ம் தேதி பெட்ரோல், டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டது. அப்போது முதல் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வருகின்றன. 14வது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

    சென்னையில் நேற்று பெட்ரோல் விலை லிட்டர் 81 ரூபாய் 82 காசுகளுக்கும், டீசல் 74 ரூபாய் 77 காசுகளுக்கும் விற்பனை ஆனது. இன்று, பெட்ரோல் 45 காசுகள் உயர்ந்து 82.27 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை 52 காசுகள் அதிகரித்து 75.29 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இந்த விலை உயர்வு இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

    கடந்த 14 நாட்களில் மட்டும் சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 6.73 ரூபாய் மற்றும் டீசல் லிட்டருக்கு 7.07 ரூபாய் விலை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 51 காசுகள் உயர்ந்து ரூ.78.78 ஆகவும், டீசல் விலை 61 காசுகள் உயர்ந்து ரூ.77.67 ஆகவும் விற்பனை ஆகிறது.

    Next Story
    ×