என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
14-வது நாளாக விலை உயர்வு- சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.82.27
Byமாலை மலர்20 Jun 2020 2:52 AM GMT (Updated: 20 Jun 2020 2:52 AM GMT)
கடந்த 14 நாட்களில் சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 6.73 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 7.07 ரூபாயும் உயர்ந்துள்ளது.
சென்னை:
சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலையை தினந்தோறும் எண்ணெய் நிறுவனங்கள் மாற்றிமைத்து வருகின்றன. ஆனால், ஊரடங்கின் காரணமாக பெட்ரோல், டீசலின் தேவை குறைந்ததால் எண்ணெய் நிறுவனங்கள் விலையில் எந்த மாற்றமும் செய்யாமல் இருந்தன. கச்சா எண்ணெய் விலை பெருமளவில் வீழ்ச்சி அடைந்த போதும் விலை குறைக்கப்படவில்லை.
82 நாட்களுக்கு பிறகு கடந்த 7-ம் தேதி பெட்ரோல், டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டது. அப்போது முதல் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வருகின்றன. 14வது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
சென்னையில் நேற்று பெட்ரோல் விலை லிட்டர் 81 ரூபாய் 82 காசுகளுக்கும், டீசல் 74 ரூபாய் 77 காசுகளுக்கும் விற்பனை ஆனது. இன்று, பெட்ரோல் 45 காசுகள் உயர்ந்து 82.27 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை 52 காசுகள் அதிகரித்து 75.29 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இந்த விலை உயர்வு இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.
கடந்த 14 நாட்களில் மட்டும் சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 6.73 ரூபாய் மற்றும் டீசல் லிட்டருக்கு 7.07 ரூபாய் விலை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 51 காசுகள் உயர்ந்து ரூ.78.78 ஆகவும், டீசல் விலை 61 காசுகள் உயர்ந்து ரூ.77.67 ஆகவும் விற்பனை ஆகிறது.
சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலையை தினந்தோறும் எண்ணெய் நிறுவனங்கள் மாற்றிமைத்து வருகின்றன. ஆனால், ஊரடங்கின் காரணமாக பெட்ரோல், டீசலின் தேவை குறைந்ததால் எண்ணெய் நிறுவனங்கள் விலையில் எந்த மாற்றமும் செய்யாமல் இருந்தன. கச்சா எண்ணெய் விலை பெருமளவில் வீழ்ச்சி அடைந்த போதும் விலை குறைக்கப்படவில்லை.
82 நாட்களுக்கு பிறகு கடந்த 7-ம் தேதி பெட்ரோல், டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டது. அப்போது முதல் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வருகின்றன. 14வது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
சென்னையில் நேற்று பெட்ரோல் விலை லிட்டர் 81 ரூபாய் 82 காசுகளுக்கும், டீசல் 74 ரூபாய் 77 காசுகளுக்கும் விற்பனை ஆனது. இன்று, பெட்ரோல் 45 காசுகள் உயர்ந்து 82.27 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை 52 காசுகள் அதிகரித்து 75.29 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இந்த விலை உயர்வு இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.
கடந்த 14 நாட்களில் மட்டும் சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 6.73 ரூபாய் மற்றும் டீசல் லிட்டருக்கு 7.07 ரூபாய் விலை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 51 காசுகள் உயர்ந்து ரூ.78.78 ஆகவும், டீசல் விலை 61 காசுகள் உயர்ந்து ரூ.77.67 ஆகவும் விற்பனை ஆகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X