என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
2 வீடுகளில் நகை-பணம் திருட்டு
Byமாலை மலர்19 Jun 2020 1:52 PM GMT (Updated: 19 Jun 2020 1:52 PM GMT)
பெரியகுளம் அருகே 2 வீடுகளில் நகை-பணம் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரியகுளம்:
பெரியகுளம் தண்டுப்பாளையம் காமாட்சியம்மன் கோவில் தெருவில் வசிப்பவர்கள் சிங்கராஜா, லட்சுமியம்மாள், ஜோதி. இவர்கள் அனைவரும் கூலித்தொழிலாளர்கள். இவர்களின் வீடுகள் அடுத்தடுத்து உள்ளன. நேற்று முன்தினம் இவர்கள் 3 பேரும் தங்களின் வீடுகளை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றுவிட்டனர். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள், சிங்கராஜா உள்பட 3 பேர் வீடுகளின் பூட்டையும் உடைத்து உள்ளே நுழைந்தனர்.
பின்னர் வீடுகளில் இருந்த நகை, பணத்தை திருடி சென்றனர். இதில், சிங்கராஜா வீட்டில் நகை, பணம் எதுவும் வைக்காததால் திருடு போகவில்லை. லட்சுமியம்மாள், ஜோதி ஆகிய 2 பேரின் வீட்டிலும் மொத்தம் 2 பவுன் நகை, ரூ.20 ஆயிரம் மற்றும் 3 செல்போன்கள் திருடுபோனது. இதுகுறித்த புகாரின் பேரில் தென்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X