search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வீடு புகுந்து கொள்ளை
    X
    வீடு புகுந்து கொள்ளை

    2 வீடுகளில் நகை-பணம் திருட்டு

    பெரியகுளம் அருகே 2 வீடுகளில் நகை-பணம் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பெரியகுளம்:

    பெரியகுளம் தண்டுப்பாளையம் காமாட்சியம்மன் கோவில் தெருவில் வசிப்பவர்கள் சிங்கராஜா, லட்சுமியம்மாள், ஜோதி. இவர்கள் அனைவரும் கூலித்தொழிலாளர்கள். இவர்களின் வீடுகள் அடுத்தடுத்து உள்ளன. நேற்று முன்தினம் இவர்கள் 3 பேரும் தங்களின் வீடுகளை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றுவிட்டனர். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள், சிங்கராஜா உள்பட 3 பேர் வீடுகளின் பூட்டையும் உடைத்து உள்ளே நுழைந்தனர்.

    பின்னர் வீடுகளில் இருந்த நகை, பணத்தை திருடி சென்றனர். இதில், சிங்கராஜா வீட்டில் நகை, பணம் எதுவும் வைக்காததால் திருடு போகவில்லை. லட்சுமியம்மாள், ஜோதி ஆகிய 2 பேரின் வீட்டிலும் மொத்தம் 2 பவுன் நகை, ரூ.20 ஆயிரம் மற்றும் 3 செல்போன்கள் திருடுபோனது. இதுகுறித்த புகாரின் பேரில் தென்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×