என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஊர் பெயர்கள் மாற்றிய அரசாணை வாபஸ்- அமைச்சர் தகவல்
Byமாலை மலர்19 Jun 2020 12:08 PM GMT (Updated: 19 Jun 2020 12:08 PM GMT)
ஊர் பெயர்களை தமிழ் உச்சரிப்பைப் போலவே ஆங்கிலத்திலும் அமைக்க வெளியிடப்பட்ட அரசாணை திரும்பப் பெறப்படுவதாக அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை:
தமிழ்நாட்டில் உள்ள ஊர்ப் பெயர்களை தமிழ் உச்சரிப்பைப் போலவே ஆங்கிலத்திலும் அமைக்க அரசு கடந்த ஏப்ரலில் அறிவிக்கை வெளியிட்டது. அந்த அறிவிக்கை சமீபத்தில் தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டது. அதில் பல ஊர்ப் பெயர்களை மாற்றி உத்தரவிடப்பட்டு இருந்தது. அதன்படி, சென்னையில் கொடுங்கையூர், எருக்கஞ்சேரி, மல்லிகைச்சேரி, மயிலாப்பூர், ஆதம்பாக்கம் உள்பட தமிழகத்தில் 1,018 பெயர்கள் மாற்றப்பட்டன.
இந்தநிலையில் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் நேற்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், ‘ஊர் பெயர்களை தமிழ் உச்சரிப்பைப் போலவே ஆங்கிலத்திலும் அமைக்க வெளியிடப்பட்ட அரசாணை திரும்பப் பெறப்படுகிறது. தமிழில் இருந்து ஆங்கிலத்தில் பெயர் மாற்றம் செய்வதற்காக நிபுணர்களின் கருத்து கேட்கப்பட்டு வருகிறது. அனைத்து தரப்பினர் கருத்தும் கேட்கப்படும். இதுதொடர்பான புதிய அரசாணையை விரைவில் எதிர்பார்க்கலாம்.’ என்று குறிப்பிட்டு உள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள ஊர்ப் பெயர்களை தமிழ் உச்சரிப்பைப் போலவே ஆங்கிலத்திலும் அமைக்க அரசு கடந்த ஏப்ரலில் அறிவிக்கை வெளியிட்டது. அந்த அறிவிக்கை சமீபத்தில் தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டது. அதில் பல ஊர்ப் பெயர்களை மாற்றி உத்தரவிடப்பட்டு இருந்தது. அதன்படி, சென்னையில் கொடுங்கையூர், எருக்கஞ்சேரி, மல்லிகைச்சேரி, மயிலாப்பூர், ஆதம்பாக்கம் உள்பட தமிழகத்தில் 1,018 பெயர்கள் மாற்றப்பட்டன.
இந்தநிலையில் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் நேற்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், ‘ஊர் பெயர்களை தமிழ் உச்சரிப்பைப் போலவே ஆங்கிலத்திலும் அமைக்க வெளியிடப்பட்ட அரசாணை திரும்பப் பெறப்படுகிறது. தமிழில் இருந்து ஆங்கிலத்தில் பெயர் மாற்றம் செய்வதற்காக நிபுணர்களின் கருத்து கேட்கப்பட்டு வருகிறது. அனைத்து தரப்பினர் கருத்தும் கேட்கப்படும். இதுதொடர்பான புதிய அரசாணையை விரைவில் எதிர்பார்க்கலாம்.’ என்று குறிப்பிட்டு உள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X