search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    சிறுமிக்கு பாலியல் தொல்லை- வீட்டின் உரிமையாளர் கைது

    திருவண்ணாமலை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வீட்டின் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுமி தனது தாயாருடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று சிறுமி வீட்டின் மாடியில் விளையாடிக் கொண்டிருந்த போது, அந்த வீட்டின் உரிமையாளர் பானுதுரை (வயது 45) என்பவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பானுதுரையை கைது செய்தனர்.
    Next Story
    ×