search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழக அரசு
    X
    தமிழக அரசு

    மின் கட்டணம் செலுத்த அவகாசம் நீட்டிப்பு இல்லை- தமிழக அரசு

    ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ள சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களை தவிர, பிற மாவட்டங்களுக்கு மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்படாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
    சென்னை:

    கொரோனா ஊரடங்கு காரணமாக மின்கட்டணம் செலுத்துவதற்கான அவகாசத்தை ஜூலை 31 வரை நீட்டிக்கக்கோரி வழக்கறிஞர் சி.ராஜசேகரன் உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்கள் தவிர, பிற மாவட்டங்களுக்கும் ஜூன் 15ம் தேதிக்குள் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் வழங்கப்பட்டதாகவும், இந்த கால அவகாசம் நீட்டிக்கப்படாது எனவும் தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார்.

    சென்னை உள்பட நான்கு மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்படுவது தொடர்பாக திங்கட்கிழமை தெரிவிப்பதாக கூறினார். இதையடுத்து, வழக்கை ஜூன் 22ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், அன்றைய தினம் இந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிவித்தனர்.

    Next Story
    ×