search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் செங்கோட்டையன்
    X
    அமைச்சர் செங்கோட்டையன்

    பிளஸ்2 தேர்வு முடிவுகள் ஜூலை முதல் வாரத்தில் வெளியாகும்- அமைச்சர் செங்கோட்டையன்

    பிளஸ்2 தேர்வு முடிவுகள் ஜூலை முதல் வாரத்தில் வெளியாகும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    தமிழகத்தில் நடைபெற்ற பிளஸ்2 தேர்வு முடிவுகள் ஜூலை மாத இறுதியில் வெளியாகும் என்று தகவல் வெளியானது.

    இந்நிலையில் பிளஸ்2 தேர்வு முடிவுகள் ஜூலை முதல் வாரத்தில் வெளியாகும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

    பிளஸ்2 தேர்வு முடிவுகள் ஜூலை முதல் வாரத்தில் வெளியாகும். கொரோனா காரணமாக புத்தகம் அச்சடிக்கும் பணி தாமதாகி உள்ளது. இம்மாத இறுதிக்குள் புத்தகங்கள் தயாராகும். புத்தகங்கள் தயாரானதும் மாணவர்களுக்கு வழங்குவது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும்.

    பாடத்திட்டம் குறைக்கும் பணி நடைபெறுகிறது. சூழ்நிலை கருதி பருவத்தேர்வு ரத்து குறித்து முதல்வர் முடிவெடுப்பார். தனியார் பள்ளிகளுக்கு கல்விக்கட்டணம் நிர்ணயம் செய்வது குறித்து முடிவு செய்யப்படும்

    இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
    Next Story
    ×