என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கீழ்பென்னாத்தூரில் வீடு புகுந்து திருடிய 2 வாலிபர்கள் கைது
Byமாலை மலர்17 Jun 2020 10:23 AM GMT (Updated: 17 Jun 2020 10:23 AM GMT)
கீழ்பென்னாத்தூரில் வீடு புகுந்து திருடிய 2 வாலிபர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை பறிமுதல் செய்தனர்.
கீழ்பென்னாத்தூர்:
கீழ்பென்னாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி மற்றும் போலீசார் கீழ்பென்னாத்தூர் அவலூர்பேட்டை செல்லும் சாலையில் நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அங்குள்ள திருமண மண்டபம் அருகே 2 வாலிபர்கள் நின்று கொண்டிருந்தனர். போலீசார் அவர்களை அழைத்து போலீசார் விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணாக பேசினர்.
இதனால் அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் கீழ்பென்னாத்தூர் அப்துல்கலாம் தெருவை சேர்ந்த கலீல் என்ற கலிலுல்லா (வயது 23), கன்னிமார் கோவில் தெருவை சேர்ந்த விஜய் (20) என்பதும், இருவரும் நண்பர்கள் என்பதும் தெரியவந்தது. இருவரும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அதே பகுதியை சேர்ந்த கலாம் (39) என்ற கோழிக்கறி வியாபாரியின் வீடு புகுந்து நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை திருடியது தெரிந்தது. இதைத்தொடர்ந்து இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இதில் கலிலுல்லா மீது மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
கீழ்பென்னாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி மற்றும் போலீசார் கீழ்பென்னாத்தூர் அவலூர்பேட்டை செல்லும் சாலையில் நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அங்குள்ள திருமண மண்டபம் அருகே 2 வாலிபர்கள் நின்று கொண்டிருந்தனர். போலீசார் அவர்களை அழைத்து போலீசார் விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணாக பேசினர்.
இதனால் அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் கீழ்பென்னாத்தூர் அப்துல்கலாம் தெருவை சேர்ந்த கலீல் என்ற கலிலுல்லா (வயது 23), கன்னிமார் கோவில் தெருவை சேர்ந்த விஜய் (20) என்பதும், இருவரும் நண்பர்கள் என்பதும் தெரியவந்தது. இருவரும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அதே பகுதியை சேர்ந்த கலாம் (39) என்ற கோழிக்கறி வியாபாரியின் வீடு புகுந்து நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை திருடியது தெரிந்தது. இதைத்தொடர்ந்து இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இதில் கலிலுல்லா மீது மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X