search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வீடு புகுந்து திருடிய 2 வாலிபர்கள்
    X
    வீடு புகுந்து திருடிய 2 வாலிபர்கள்

    கீழ்பென்னாத்தூரில் வீடு புகுந்து திருடிய 2 வாலிபர்கள் கைது

    கீழ்பென்னாத்தூரில் வீடு புகுந்து திருடிய 2 வாலிபர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை பறிமுதல் செய்தனர்.
    கீழ்பென்னாத்தூர்:

    கீழ்பென்னாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி மற்றும் போலீசார் கீழ்பென்னாத்தூர் அவலூர்பேட்டை செல்லும் சாலையில் நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அங்குள்ள திருமண மண்டபம் அருகே 2 வாலிபர்கள் நின்று கொண்டிருந்தனர். போலீசார் அவர்களை அழைத்து போலீசார் விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணாக பேசினர்.

    இதனால் அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் கீழ்பென்னாத்தூர் அப்துல்கலாம் தெருவை சேர்ந்த கலீல் என்ற கலிலுல்லா (வயது 23), கன்னிமார் கோவில் தெருவை சேர்ந்த விஜய் (20) என்பதும், இருவரும் நண்பர்கள் என்பதும் தெரியவந்தது. இருவரும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அதே பகுதியை சேர்ந்த கலாம் (39) என்ற கோழிக்கறி வியாபாரியின் வீடு புகுந்து நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை திருடியது தெரிந்தது. இதைத்தொடர்ந்து இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    இதில் கலிலுல்லா மீது மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×