search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை
    X
    ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை

    முதல்வரின் அலுவலக தனிச்செயலாளர் கொரோனாவுக்கு பலி

    தமிழக முதல்வரின் அலுவலக தனிச்செயலாளர் தாமோதரன் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
    சென்னை:

    தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. கடந்த சில தினங்களாக ஆயிரத்திற்கும் மேல் சென்ற பாதிப்பு நேற்று மட்டும் ஆயிரத்திற்குள் வந்துள்ளது.

    நேற்று வரை சென்னையில் 34 ஆயிரத்து 245 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணம் அடைந்து உள்ளனர். கொரோனாவுக்கு இதுவரை 422 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இந்நிலையில் இன்று தமிழக முதல்வரின் அலுவலக தனிச்செயலாளர் தாமோதரன் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
     
    கொரோனா தொற்று உறுதியான தாமோதரன் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 
    Next Story
    ×