என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தூத்துக்குடி, கோவில்பட்டியில் அரசு போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்16 Jun 2020 3:45 PM GMT (Updated: 16 Jun 2020 3:45 PM GMT)
தூத்துக்குடி, கோவில்பட்டியில் அரசு போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி முத்தம்மாள் காலனியில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு போக்குவரத்து கழக ஊழியர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு தொழிலாளர் முன்னேற்ற சங்க கிளை தலைவர் மரியதாஸ் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் டெப்போவை விட்டு வெளியே சென்று பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு பயணப்படி வேண்டி உரிய காலத்தில் சமர்ப்பித்தும் இதுவரை வழங்கப்படவில்லை. உடனடியாக நடவடிக்கை எடுத்து பயணப்படி வழங்க வேண்டும். ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்பட்ட பஸ்களில் பணியாற்றிய பஸ் டிரைவர்கள், கண்டக்டர்களுக்கு உரியபடிகள் வழங்க வேண்டும், முககவசம், சானிடைசர் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் ஐ.என்.டி.யு.சி. சண்முகம், சி.ஐ.டியு. மத்திய சங்க துணை செயலாளர் ஜான் கென்னடி, எல்.பி.எப். சந்திரசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கோவில்பட்டி அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. தொ.மு.ச. தலைவர் வெங்கடசாமி தலைமை தாங்கினார்.
அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு சுழற்சி முறையில் பணி ஒதுக்கீடு வழங்க வேண்டும். ஊழியர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டால் சிகிச்சை அளித்து, சிறப்பு விடுப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தொ.மு.ச. செயலாளர் மாரியப்பன், சி.ஐ.டி.யு. தலைவர் கருப்பசாமி, செயலாளர் மோகன், ஏ.ஐ.டி.யு.சி. தலைவர் சிவமுருகன், செயலாளர் காளிராஜ், ஐ.என்.டி.யு.சி. தலைவர் மகேந்திரன், செயலாளர் மாணிக்கவாசகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஸ்ரீவைகுண்டம் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் எல்.பி.எப். சங்க தலைவர் முத்துராமலிங்கம், சி.ஐ.டி.யு. மத்திய சங்க துணை செயலாளர் குமரகுருபரன், ஐ.என்.டி.யு.சி. கிளை தலைவர் சுப்பையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி முத்தம்மாள் காலனியில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு போக்குவரத்து கழக ஊழியர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு தொழிலாளர் முன்னேற்ற சங்க கிளை தலைவர் மரியதாஸ் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் டெப்போவை விட்டு வெளியே சென்று பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு பயணப்படி வேண்டி உரிய காலத்தில் சமர்ப்பித்தும் இதுவரை வழங்கப்படவில்லை. உடனடியாக நடவடிக்கை எடுத்து பயணப்படி வழங்க வேண்டும். ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்பட்ட பஸ்களில் பணியாற்றிய பஸ் டிரைவர்கள், கண்டக்டர்களுக்கு உரியபடிகள் வழங்க வேண்டும், முககவசம், சானிடைசர் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் ஐ.என்.டி.யு.சி. சண்முகம், சி.ஐ.டியு. மத்திய சங்க துணை செயலாளர் ஜான் கென்னடி, எல்.பி.எப். சந்திரசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கோவில்பட்டி அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. தொ.மு.ச. தலைவர் வெங்கடசாமி தலைமை தாங்கினார்.
அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு சுழற்சி முறையில் பணி ஒதுக்கீடு வழங்க வேண்டும். ஊழியர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டால் சிகிச்சை அளித்து, சிறப்பு விடுப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தொ.மு.ச. செயலாளர் மாரியப்பன், சி.ஐ.டி.யு. தலைவர் கருப்பசாமி, செயலாளர் மோகன், ஏ.ஐ.டி.யு.சி. தலைவர் சிவமுருகன், செயலாளர் காளிராஜ், ஐ.என்.டி.யு.சி. தலைவர் மகேந்திரன், செயலாளர் மாணிக்கவாசகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஸ்ரீவைகுண்டம் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் எல்.பி.எப். சங்க தலைவர் முத்துராமலிங்கம், சி.ஐ.டி.யு. மத்திய சங்க துணை செயலாளர் குமரகுருபரன், ஐ.என்.டி.யு.சி. கிளை தலைவர் சுப்பையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X