search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    ரூ.35 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்: தந்தை - மகன்கள் கைது

    திருப்பத்தூர் அருகே பாழடைந்த வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.35 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக தந்தை-மகன்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    திருப்பத்தூர்:

    திருப்பத்தூரை அடுத்த புலிகுட்டை ஆதிசக்தி நகரில் உள்ள ஒரு பாழடைந்த வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக வேலூர் போதை தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சென்னை போதை தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த வீட்டில் சோதனை செய்தனர்.

    அப்போது அங்கு மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.35 லட்சம் மதிப்புள்ள 350 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, வேலூர் போதை தடுப்பு பிரிவு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

    இதுதொடர்பாக அதே பகுதியை சேர்ந்த ராஜேஷ் (வயது 40), அவரது மகன்கள் கோகுல்நாத் (23), மனோஜ் (23) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×