என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிறுமியை கடத்தி திருமணம்- ஆம்புலன்ஸ் டிரைவர்கள் 3 பேர் கைது
Byமாலை மலர்15 Jun 2020 3:36 PM GMT (Updated: 15 Jun 2020 3:36 PM GMT)
கொளத்தூர் அருகே சிறுமியை கடத்தி திருமணம் செய்த ஆம்புலன்ஸ் டிரைவர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கொளத்தூர்:
கொளத்தூரை அடுத்த சித்திரைப்பட்டி புதூரை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவரை குஞ்சாண்டியூரை அடுத்த திப்பம்பட்டியை சேர்ந்த ஆம்புலன்ஸ் டிரைவர் விக்னேஷ் (வயது 24) என்பவர் கடந்த 11-ந் தேதி கடத்தி சென்று திருமணம் செய்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த கொளத்தூர் போலீசார் நேற்று விக்னேசை கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில், அந்த சிறுமியை அவர் கடத்தி சென்று திருமணம் செய்து கொண்டதும், இதற்கு உடந்தையாக விக்னேசின் அண்ணன் ஐயப்பன், பள்ளிப்பட்டியை சேர்ந்த மைத்துனர் கண்ணன் ஆகியோர் செயல்பட்டதும் தெரியவந்தது. இதனைதொடர்ந்து அவர்களும் கைது செய்யப்பட்டு 3 பேரும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர். அந்த சிறுமி மருத்துவ பரிசோதனைக்கு பிறகு பெண்கள் காப்பகத்தில் சேர்க்கப்பட்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேரும் ஆம்புலன்ஸ் டிரைவர்கள் என்பது குறிப்பிடதக்கதாகும்.
கொளத்தூரை அடுத்த சித்திரைப்பட்டி புதூரை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவரை குஞ்சாண்டியூரை அடுத்த திப்பம்பட்டியை சேர்ந்த ஆம்புலன்ஸ் டிரைவர் விக்னேஷ் (வயது 24) என்பவர் கடந்த 11-ந் தேதி கடத்தி சென்று திருமணம் செய்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த கொளத்தூர் போலீசார் நேற்று விக்னேசை கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில், அந்த சிறுமியை அவர் கடத்தி சென்று திருமணம் செய்து கொண்டதும், இதற்கு உடந்தையாக விக்னேசின் அண்ணன் ஐயப்பன், பள்ளிப்பட்டியை சேர்ந்த மைத்துனர் கண்ணன் ஆகியோர் செயல்பட்டதும் தெரியவந்தது. இதனைதொடர்ந்து அவர்களும் கைது செய்யப்பட்டு 3 பேரும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர். அந்த சிறுமி மருத்துவ பரிசோதனைக்கு பிறகு பெண்கள் காப்பகத்தில் சேர்க்கப்பட்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேரும் ஆம்புலன்ஸ் டிரைவர்கள் என்பது குறிப்பிடதக்கதாகும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X