search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழைக்கு வாய்ப்பு உள்ள பகுதிகள் (பச்சை நிறம்)
    X
    மழைக்கு வாய்ப்பு உள்ள பகுதிகள் (பச்சை நிறம்)

    பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும்- வானிலை ஆய்வு மையம்

    தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவக்கூடும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவக்கூடும். நீலகிரி, கோவை, தேனி, திருவள்ளூர் மாவட்டங்களில் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    வட தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். சென்னையைப் பொருத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சம் 29 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கும்.

    ஜூன் 17 முதல் 19 வரை மத்திய வங்கக்கடல் பகுதியில் பலத்த காற்று வீசக்கூடும். எனவே, அப்பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×