என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சென்னையில் ஒரே நாளில் 55 போலீசாரை தாக்கிய கொரோனா
Byமாலை மலர்14 Jun 2020 2:57 AM GMT (Updated: 14 Jun 2020 2:57 AM GMT)
சென்னை போலீசில் நேற்று ஒரே நாளில் இதுவரை இல்லாத வகையில் 55 பேரை கொரோனா தாக்கியது. அரும்பாக்கம் போலீஸ் நிலையத்தில் 2 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 7 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
சென்னை போலீசில் கொரோனாவின் தாக்குதல் வேகம் தினமும் அதிகரித்த வண்ணம் உள்ளது. சென்னை போலீசில் 582 பேர் ஏற்கனவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் புதிதாக 55 பேர் பாதிக்கப்பட்டனர். இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 637 ஆக உயர்ந்தது.
சென்னை போலீசின் புதிய பாதிப்பில் ஒரு துணை போலீஸ் சூப்பிரண்டு, 2 பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடம் பெற்றனர். போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றும் ஒரு பெண் இன்ஸ்பெக்டருக்கு நேற்று தொற்று உறுதியானது. அவரது கணவரான இன்ஸ்பெக்டர் ஏற்கனவே தொற்றில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அரும்பாக்கம் போலீஸ்நிலையத்தில் சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டர் ஏற்கனவே பாதிப்பில் உள்ளார். நேற்று குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டரும், 5 போலீசாரும் கொரோனா தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளனர். அரும்பாக்கம் போலீஸ்நிலையம் நேற்று கொரோனா தடுப்பு பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. 2 இன்ஸ்பெக்டர்களின் அறைகளும் பூட்டப்பட்டன.
சென்னை போலீசில் பூரண குணம் அடைந்து பணிக்கு திரும்பி உள்ளவர்களின் எண்ணிக்கை நேற்று 236 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 6 பேர் பூரண குணம் அடைந்து மீண்டும் பணியில் சேர்ந்தார்கள். அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
சென்னை போலீசின் புதிய பாதிப்பில் ஒரு துணை போலீஸ் சூப்பிரண்டு, 2 பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடம் பெற்றனர். போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றும் ஒரு பெண் இன்ஸ்பெக்டருக்கு நேற்று தொற்று உறுதியானது. அவரது கணவரான இன்ஸ்பெக்டர் ஏற்கனவே தொற்றில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அரும்பாக்கம் போலீஸ்நிலையத்தில் சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டர் ஏற்கனவே பாதிப்பில் உள்ளார். நேற்று குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டரும், 5 போலீசாரும் கொரோனா தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளனர். அரும்பாக்கம் போலீஸ்நிலையம் நேற்று கொரோனா தடுப்பு பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. 2 இன்ஸ்பெக்டர்களின் அறைகளும் பூட்டப்பட்டன.
சென்னை போலீசில் பூரண குணம் அடைந்து பணிக்கு திரும்பி உள்ளவர்களின் எண்ணிக்கை நேற்று 236 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 6 பேர் பூரண குணம் அடைந்து மீண்டும் பணியில் சேர்ந்தார்கள். அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X