search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முக ஸ்டாலின்
    X
    முக ஸ்டாலின்

    அதிமுக எம்.எல்.ஏ. விரைந்து நலம்பெற வேண்டும்: மு.க.ஸ்டாலின்

    கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் ஸ்ரீபெரும்புதூர் அதிமுக எம்எல்ஏ பழனி விரைந்து நலம்பெற வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.
    சென்னை:

    ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ பழனிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர், சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்நிலையில் கொரோனா தொற்று உறுதியான அதிமுக எல்.எல்.ஏ. பழனி முழுமையாக நலமடைய வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியிருப்பதாவது:

    எல்.எல்.ஏ. பழனி நலமடைந்து மக்கள் பணியாற்ற வர வேண்டும் என்று மனதார விரும்புகிறேன்.

    பொதுப்பணியில் இருப்பவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.


    Next Story
    ×