என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திமிரி அருகே 3 போலி டாக்டர்கள் கைது- 4 சிகிச்சை மையங்களுக்கு ‘சீல்’
Byமாலை மலர்12 Jun 2020 7:25 AM GMT (Updated: 12 Jun 2020 7:25 AM GMT)
திமிரி அருகே 3 போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் அனுமதி பெறாமல் நடத்தி வந்த 4 சிகிச்சை மையங்களுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
ஆற்காடு:
ராணிப்பேட்டை மாவட்டம் திமிரியை அடுத்த காவனூர் பகுதியில் டாக்டர் படிப்பு படிக்காமல் சிலர் ஆங்கில மருத்துவம் பார்த்து வருவதாக கலெக்டர் திவ்யதர்ஷினிக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குழு மாவட்ட அதிகாரி டாக்டர் கீர்த்தி தலைமையில் 5 தனிப்படை அமைத்து காவனூர் பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது காந்தி (வயது 65), பார்த்திபன் (52), ரங்கநாதன் (47) ஆகிய 3 பேரும் டாக்டர் படிப்பு படிக்காமல் மருத்துவ சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 3 பேரையும் திமிரி போலீசார் கைது செய்தனர்.
அத்துடன் அனுமதியின்றி அவர்கள் நடத்தி வந்த 3 சிகிச்சை மையங்கள் மற்றும் லட்சுமி நாராயணன் என்பவர் நடத்தி வந்த கிளினிக் ஆகிய 4 சிகிச்சை மையங்களுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர். போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்டம் திமிரியை அடுத்த காவனூர் பகுதியில் டாக்டர் படிப்பு படிக்காமல் சிலர் ஆங்கில மருத்துவம் பார்த்து வருவதாக கலெக்டர் திவ்யதர்ஷினிக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குழு மாவட்ட அதிகாரி டாக்டர் கீர்த்தி தலைமையில் 5 தனிப்படை அமைத்து காவனூர் பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது காந்தி (வயது 65), பார்த்திபன் (52), ரங்கநாதன் (47) ஆகிய 3 பேரும் டாக்டர் படிப்பு படிக்காமல் மருத்துவ சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 3 பேரையும் திமிரி போலீசார் கைது செய்தனர்.
அத்துடன் அனுமதியின்றி அவர்கள் நடத்தி வந்த 3 சிகிச்சை மையங்கள் மற்றும் லட்சுமி நாராயணன் என்பவர் நடத்தி வந்த கிளினிக் ஆகிய 4 சிகிச்சை மையங்களுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர். போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X