என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வரதட்சணை கொடுமை- டெக்ஸ்டைல் நிறுவன மேற்பார்வையாளர் கைது
Byமாலை மலர்11 Jun 2020 2:54 PM GMT (Updated: 11 Jun 2020 2:54 PM GMT)
காதல் மனைவியை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய டெக்ஸ்டைல் நிறுவன மேற்பார்வையாளரை போலீசார் கைது செய்தனர்.
கரூர்:
கரூர் அருகே உள்ள ராயனூர் அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் அன்பழகன் (வயது 29). இவர் தனியார் டெக்ஸ்டைல் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த பெமினாபேகம் (27) என்பவரை காதலித்து கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.
இந்தநிலையில் அன்பழகன் தனது மனைவி பெமினாவை, தாய் வீட்டிற்கு சென்று ரூ.2 லட்சம் மற்றும் நகை வாங்கி வருமாறு கூறியுள்ளார். மேலும், கடந்த சில நாட்களுக்கு முன்பு அன்பழகன், வரதட்சணை கேட்டு மனைவியை தாக்கி அடித்ததாக தெரிகிறது. இதனால் காயம் அடைந்த பெமினாபேகம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து கரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பெமினாபேகம் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்தியபிரியா வழக்குப்பதிந்து, வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக அன்பழகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
கரூர் அருகே உள்ள ராயனூர் அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் அன்பழகன் (வயது 29). இவர் தனியார் டெக்ஸ்டைல் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த பெமினாபேகம் (27) என்பவரை காதலித்து கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.
இந்தநிலையில் அன்பழகன் தனது மனைவி பெமினாவை, தாய் வீட்டிற்கு சென்று ரூ.2 லட்சம் மற்றும் நகை வாங்கி வருமாறு கூறியுள்ளார். மேலும், கடந்த சில நாட்களுக்கு முன்பு அன்பழகன், வரதட்சணை கேட்டு மனைவியை தாக்கி அடித்ததாக தெரிகிறது. இதனால் காயம் அடைந்த பெமினாபேகம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து கரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பெமினாபேகம் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்தியபிரியா வழக்குப்பதிந்து, வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக அன்பழகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X