என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனா பரிசோதனை மேற்கொள்ளாமல் குமரிக்குள் நுழைந்தவர்களால் பரபரப்பு
Byமாலை மலர்11 Jun 2020 7:54 AM GMT (Updated: 11 Jun 2020 7:54 AM GMT)
மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து கொரோனா பரிசோதனை மேற்கொள்ளாமல் குமரிக்குள் நுழைந்தவர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
கொல்லங்கோடு:
மகாராஷ்டிர மாநிலம், சென்னை மற்றும் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களால் தற்போது குமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.
அவ்வாறு குமரிக்கு வரும் நபர்கள் களியக்காவிளை, ஆரல்வாய்மொழி சோதனைச்சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டு கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். பின்னர் பரிசோதனை முடிவு தெரியும் வரை முகாம்களில் தங்க வைக்கப்படுகிறார்கள். மகாராஷ்டிர மாநிலம், சென்னையில் இருந்து வந்தால் கட்டாயம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளாமல் மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து குமரிக்குள் நுழைந்த 8 பேரால் பரபரப்பு ஏற்பட்டது. அதாவது, குமரி மாவட்டம் நித்திரவிளை அருகே கலிங்கராஜபுரம் பகுதியை சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க நபர் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அவர் தன்னுடைய மனைவி, 15 வயது மகள், 14 வயது மகன் மற்றும் 4 நபர் என மொத்தம் 8 பேருடன் மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்தார்.
தொடர்ந்து அவர்கள் ஒரு கார் மூலம் காக்கவிளை வழியாக நேற்றுமுன்தினம் குமரிக்குள் நுழைந்து சொந்த ஊருக்கு சென்றனர். அதாவது, கொரோனா பரிசோதனை மேற்கொள்ளாமல் போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து விட்டு வீட்டில் இருந்துள்ளனர். இந்த தகவல் அந்த பகுதி மக்களிடையே தெரிய வந்தது. உடனே சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு பொதுமக்கள் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, தூத்தூர் ஆரம்ப சுகாதார நிலைய அலுவலர்கள் நேற்று மதியம் 2 ஆம்புலன்சுகளுடன் கலிங்கராஜபுரம் கிராமத்திற்கு வந்தடைந்தனர்.
பின்னர், 8 பேரையும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வருமாறு அழைத்துள்ளனர். அப்போது, உறவினர் பெண் ஒருவர், உங்களிடம் யார் சொன்னது, அவர்கள் அனைவரும் பரிசோதனை முடிந்து தான் வந்துள்ளார்கள். அதனால் அவர்கள் எங்கும் வரமாட்டார்கள் என சுகாதாரத்துறை அலுவலர்களிடம் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து அங்கு போலீசார் வரவழைக்கப்பட்டனர். அதன்படி நித்திரவிளை போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் இன்பராஜ் மற்றும் போலீசார் விரைந்து வந்து, 8 பேரையும் ஆம்புலன்சில் ஏற்றி ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து குமரிக்குள் நுழைந்த 8 பேரால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
மகாராஷ்டிர மாநிலம், சென்னை மற்றும் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களால் தற்போது குமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.
அவ்வாறு குமரிக்கு வரும் நபர்கள் களியக்காவிளை, ஆரல்வாய்மொழி சோதனைச்சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டு கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். பின்னர் பரிசோதனை முடிவு தெரியும் வரை முகாம்களில் தங்க வைக்கப்படுகிறார்கள். மகாராஷ்டிர மாநிலம், சென்னையில் இருந்து வந்தால் கட்டாயம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளாமல் மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து குமரிக்குள் நுழைந்த 8 பேரால் பரபரப்பு ஏற்பட்டது. அதாவது, குமரி மாவட்டம் நித்திரவிளை அருகே கலிங்கராஜபுரம் பகுதியை சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க நபர் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அவர் தன்னுடைய மனைவி, 15 வயது மகள், 14 வயது மகன் மற்றும் 4 நபர் என மொத்தம் 8 பேருடன் மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்தார்.
தொடர்ந்து அவர்கள் ஒரு கார் மூலம் காக்கவிளை வழியாக நேற்றுமுன்தினம் குமரிக்குள் நுழைந்து சொந்த ஊருக்கு சென்றனர். அதாவது, கொரோனா பரிசோதனை மேற்கொள்ளாமல் போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து விட்டு வீட்டில் இருந்துள்ளனர். இந்த தகவல் அந்த பகுதி மக்களிடையே தெரிய வந்தது. உடனே சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு பொதுமக்கள் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, தூத்தூர் ஆரம்ப சுகாதார நிலைய அலுவலர்கள் நேற்று மதியம் 2 ஆம்புலன்சுகளுடன் கலிங்கராஜபுரம் கிராமத்திற்கு வந்தடைந்தனர்.
பின்னர், 8 பேரையும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வருமாறு அழைத்துள்ளனர். அப்போது, உறவினர் பெண் ஒருவர், உங்களிடம் யார் சொன்னது, அவர்கள் அனைவரும் பரிசோதனை முடிந்து தான் வந்துள்ளார்கள். அதனால் அவர்கள் எங்கும் வரமாட்டார்கள் என சுகாதாரத்துறை அலுவலர்களிடம் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து அங்கு போலீசார் வரவழைக்கப்பட்டனர். அதன்படி நித்திரவிளை போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் இன்பராஜ் மற்றும் போலீசார் விரைந்து வந்து, 8 பேரையும் ஆம்புலன்சில் ஏற்றி ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து குமரிக்குள் நுழைந்த 8 பேரால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X