என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தமிழகம், புதுவையில் பெரும்பாலான இடங்களில் மழைக்கு வாய்ப்பு
Byமாலை மலர்10 Jun 2020 10:28 AM GMT (Updated: 10 Jun 2020 10:28 AM GMT)
தமிழகம், புதுவையில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு தென்மேற்கு பருவக்காற்று காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக காரைக்காலில் 3 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. நாகப்பட்டினத்தில் 2 செமீ மழை பெய்துள்ளது.
மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக ஜூன் 10 மற்றும் 11ம் தேதிகளில் மத்திய, தெற்கு மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் மணிக்கு 40-50 கிமீ வேகத்தில் காற்றுவீசக்கூடும். மத்திய மேற்கு, வடமேற்கு வங்கக்கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டிய ஒடிசா கடலோர பகுதியில் மணிக்க 45-55 கிமீ வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும்.
ஜூன் 11ம் தேதி வட தமிழக மற்றும் ஆந்திர கடலோர பகுதிகளிலும், ஜூன் 10 முதல் 14ம் தேதி வரை தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதியிலும், ஜூன் 13ம் தேதி கோவா மற்றும் அதனை ஒட்டிய கர்நாடக கடலோர பகுதிகளிலும், ஜூன் 13 மற்றும் 14 ஆகிய நாட்களில் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியிலும் பலத்த காற்று வீசக்கூடும்.
குளச்சல் கடல் பகுதி முதல் தனுஷ்கோடி வரை ஒரு சில நேரங்களில் கடல் அலை 2.9 முதல் 3.9 மீட்டர் வரை எழும்பக்கூடும். எனவே, மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
சென்னையைப் பொருத்தவரை வானம் பொதுவாக மேக மூட்டத்துடன் காணப்படம். நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு தென்மேற்கு பருவக்காற்று காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக காரைக்காலில் 3 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. நாகப்பட்டினத்தில் 2 செமீ மழை பெய்துள்ளது.
மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக ஜூன் 10 மற்றும் 11ம் தேதிகளில் மத்திய, தெற்கு மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் மணிக்கு 40-50 கிமீ வேகத்தில் காற்றுவீசக்கூடும். மத்திய மேற்கு, வடமேற்கு வங்கக்கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டிய ஒடிசா கடலோர பகுதியில் மணிக்க 45-55 கிமீ வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும்.
ஜூன் 11ம் தேதி வட தமிழக மற்றும் ஆந்திர கடலோர பகுதிகளிலும், ஜூன் 10 முதல் 14ம் தேதி வரை தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதியிலும், ஜூன் 13ம் தேதி கோவா மற்றும் அதனை ஒட்டிய கர்நாடக கடலோர பகுதிகளிலும், ஜூன் 13 மற்றும் 14 ஆகிய நாட்களில் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியிலும் பலத்த காற்று வீசக்கூடும்.
குளச்சல் கடல் பகுதி முதல் தனுஷ்கோடி வரை ஒரு சில நேரங்களில் கடல் அலை 2.9 முதல் 3.9 மீட்டர் வரை எழும்பக்கூடும். எனவே, மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
சென்னையைப் பொருத்தவரை வானம் பொதுவாக மேக மூட்டத்துடன் காணப்படம். நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X