என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனா சிகிச்சை பணிக்கு 2834 மருத்துவ பணியாளர்களை பணியமர்த்த முதல்வர் உத்தரவு
Byமாலை மலர்10 Jun 2020 10:05 AM GMT (Updated: 10 Jun 2020 10:05 AM GMT)
தமிழகத்தில் கொரோனா சிகிச்சை பணிக்கு 2834 மருத்துவ பணியாளர்களை பணியமர்த்த முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சென்னை:
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மருத்துவப் பணியாளர்களின் தேவையும் அதிகரித்துள்ளது. இதற்காக கூடுதல் மருத்துவப் பணியாளர்கள் அவ்வப்போது நியமிக்கப்படுகின்றனர். அவ்வகையில், தற்போது
கொரோனா சிகிச்சை பணிகளுக்காக 2834 மருத்துவ பணியாளர்களை கூடுதலாக பணியமர்த்த முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதுதொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது:-
கொரோனா சிகிச்சை பணிகளுக்காக 1239 மருத்துவர்கள் உள்பட 2834 மருத்துவ பணியாளர்கள் பணியமர்த்த முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதாவது அரசுப் பணியில் இல்லாத 574 முதுநிலை மருத்துவ மாணவர்களை மாதம் 75000 ரூபாய் சம்பளத்துடன், மருத்துவமனைகளில் கூடுதல் பணியாளர்களாக நியமிக்க உத்தரவிட்டிருக்கிறார். 665 மருத்துவர்களை மாதம் 60000 ரூபாய் சம்பளத்துடன் நியமிக்க உத்தரவிட்டுள்ளார்.
மாத ஊதியம் 15000 ரூபாய் வீதத்தில் 365 ஆய்வக பணியாளர்கள், மாத ஊதியம் 12000 ரூபாய் வீதத்தில் 1230 பல்நோக்கு சுகாதார பணியாளர்களையும் நியமிக்க முதல்வர் உத்தரவிட்டிருக்கிறார். 2834 மருத்துவப் பணியாளர்களும் 3 மாத காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மருத்துவப் பணியாளர்களின் தேவையும் அதிகரித்துள்ளது. இதற்காக கூடுதல் மருத்துவப் பணியாளர்கள் அவ்வப்போது நியமிக்கப்படுகின்றனர். அவ்வகையில், தற்போது
கொரோனா சிகிச்சை பணிகளுக்காக 2834 மருத்துவ பணியாளர்களை கூடுதலாக பணியமர்த்த முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதுதொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது:-
கொரோனா சிகிச்சை பணிகளுக்காக 1239 மருத்துவர்கள் உள்பட 2834 மருத்துவ பணியாளர்கள் பணியமர்த்த முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதாவது அரசுப் பணியில் இல்லாத 574 முதுநிலை மருத்துவ மாணவர்களை மாதம் 75000 ரூபாய் சம்பளத்துடன், மருத்துவமனைகளில் கூடுதல் பணியாளர்களாக நியமிக்க உத்தரவிட்டிருக்கிறார். 665 மருத்துவர்களை மாதம் 60000 ரூபாய் சம்பளத்துடன் நியமிக்க உத்தரவிட்டுள்ளார்.
மாத ஊதியம் 15000 ரூபாய் வீதத்தில் 365 ஆய்வக பணியாளர்கள், மாத ஊதியம் 12000 ரூபாய் வீதத்தில் 1230 பல்நோக்கு சுகாதார பணியாளர்களையும் நியமிக்க முதல்வர் உத்தரவிட்டிருக்கிறார். 2834 மருத்துவப் பணியாளர்களும் 3 மாத காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X