என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆரணி அருகே கிளினீக் நடத்திய போலி டாக்டர் கைது
Byமாலை மலர்10 Jun 2020 7:31 AM GMT (Updated: 10 Jun 2020 7:31 AM GMT)
ஆரணி அருகே கிளினீக் நடத்திய போலி டாக்டரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆரணி:
ஆரணி அடுத்த களம்பூர் மருத்துவமனை தெருவை சேர்ந்தவர் ரவி (வயது40). இவர் ஆரணி அடுத்த குன்னத்தூரில் கிளினீக் நடத்தி வருகிறார். பி.ஏ. படித்துள்ள ரவி எம்.பி.எஸ். படித்ததாக கூறி நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருவதாக ஆரணி மருத்துவ அலுவலர் நந்தினிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து மருத்துவக்குழுவினர் குன்னத்தூரில் ரவி வைத்துள்ள கிளினீக்கில் திடீர் சோதனை செய்தனர். அப்போது அவர் நோயாளிகளுக்கு மருத்துவ சிகிச்சை அளித்து வருவது தெரியவந்தது.
அங்கிருந்த மருந்து, மாத்திரை, ஊசிகளை பறிமுதல் செய்தனர்.
மேலும் மருத்துவ அலுவலர் நந்தினி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து ரவிவை கைது செய்தனர்.
பின்னர் அவரை ஆரணி கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X