search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    ஆரணி அருகே கிளினீக் நடத்திய போலி டாக்டர் கைது

    ஆரணி அருகே கிளினீக் நடத்திய போலி டாக்டரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆரணி:

    ஆரணி அடுத்த களம்பூர் மருத்துவமனை தெருவை சேர்ந்தவர் ரவி (வயது40). இவர் ஆரணி அடுத்த குன்னத்தூரில் கிளினீக் நடத்தி வருகிறார். பி.ஏ. படித்துள்ள ரவி எம்.பி.எஸ். படித்ததாக கூறி நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருவதாக ஆரணி மருத்துவ அலுவலர் நந்தினிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து மருத்துவக்குழுவினர் குன்னத்தூரில் ரவி வைத்துள்ள கிளினீக்கில் திடீர் சோதனை செய்தனர். அப்போது அவர் நோயாளிகளுக்கு மருத்துவ சிகிச்சை அளித்து வருவது தெரியவந்தது.

    அங்கிருந்த மருந்து, மாத்திரை, ஊசிகளை பறிமுதல் செய்தனர்.

    மேலும் மருத்துவ அலுவலர் நந்தினி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து ரவிவை கைது செய்தனர்.

    பின்னர் அவரை ஆரணி கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    Next Story
    ×