என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் உடல்நிலை மீண்டும் கவலைக்கிடம்
Byமாலை மலர்8 Jun 2020 3:33 PM GMT (Updated: 8 Jun 2020 3:33 PM GMT)
கொரோனாவால் பாதிக்கப்பட்ட திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகனின் உடல்நிலை தேறி வந்த நிலையில் மீண்டும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னை:
திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் மூச்சுத்திணறல் காரணமாக குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர். அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் வென்டிலேட்டர் பொருத்தப்பட்டுள்ளது.
வென்டிலேட்டர் பொருத்தபட்ட சமயத்தில் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருந்தது. அதன் பின்னர் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். வென்டிலேட்டர் மூலம் ஆக்சிஜன் தேவை குறைந்திருப்பதாகவும் கூறினர்.
இந்நிலையில் திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகனின் உடல்நிலை தேறி வந்த நிலையில் மீண்டும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இன்று மாலையில் இருந்து ஜெ.அன்பழகனுக்கு தேவைப்படும் ஆக்ஸிஜன் அளவு அதிகரித்துள்ளதாகவும், அவரது இதயம், சிறுநீரகத்தின் செயல்பாடுகள் மோசமடைந்துள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஜெ.அன்பழகனின் ரத்த அழுத்தத்தை சீராக வைப்பதற்கு மருந்துகள் அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
கடந்த சில நாட்களாக ஜெ.அன்பழகனின் உடல்நிலை தேறி வந்த நிலையில் மீண்டும் மோசமடைந்துள்ளது.
திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் மூச்சுத்திணறல் காரணமாக குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர். அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் வென்டிலேட்டர் பொருத்தப்பட்டுள்ளது.
வென்டிலேட்டர் பொருத்தபட்ட சமயத்தில் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருந்தது. அதன் பின்னர் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். வென்டிலேட்டர் மூலம் ஆக்சிஜன் தேவை குறைந்திருப்பதாகவும் கூறினர்.
இந்நிலையில் திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகனின் உடல்நிலை தேறி வந்த நிலையில் மீண்டும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இன்று மாலையில் இருந்து ஜெ.அன்பழகனுக்கு தேவைப்படும் ஆக்ஸிஜன் அளவு அதிகரித்துள்ளதாகவும், அவரது இதயம், சிறுநீரகத்தின் செயல்பாடுகள் மோசமடைந்துள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஜெ.அன்பழகனின் ரத்த அழுத்தத்தை சீராக வைப்பதற்கு மருந்துகள் அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
கடந்த சில நாட்களாக ஜெ.அன்பழகனின் உடல்நிலை தேறி வந்த நிலையில் மீண்டும் மோசமடைந்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X