என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சென்னையில் 84 சதவீதம் தெருக்களில் கொரோனா பாதிப்பு இல்லை: சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தகவல்
Byமாலை மலர்7 Jun 2020 5:58 AM GMT (Updated: 7 Jun 2020 5:58 AM GMT)
சென்னையில் 84 சதவீதம் தெருக்களில் கொரோனா பாதிப்பு இல்லை என்று சிறப்பு அதிகாரி டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
சென்னை தண்டையார்பேட்டை மண்டலத்துக்குட்பட்ட பழைய வண்ணாரப்பேட்டை, சோலையப்பன் தெரு, தண்டையார்பேட்டை, நேதாஜி நகர் மற்றும் நேரு நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கொரோனா தொற்று தடுப்பு சிறப்பு அதிகாரி டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் முககவசங்களை பொதுமக்களுக்கு வழங்கினார்.
நேரு நகர் பகுதியில் உள்ள சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் நடமாடும் கொரோனா பரிசோதனை மையத்தை பார்வையிட்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கொரோனா தொற்று அதிகம் உள்ள தண்டையார்பேட்டை பகுதியில் உள்ள பொதுமக்களை சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளோம். சென்னையில் வசிப்பவர்களுக்கு 52 லட்சம் முககவசங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் தெருவாரியாக எத்தனை பேருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளது என்று கணக்கெடுக்கப்படுகிறது. சென்னையில் 39 ஆயிரத்து 539 தெருக்கள் உள்ளது. இதில் பாதிக்கப்பட்ட 20 ஆயிரம் பேர், 6 ஆயிரத்து 537 தெருக்களில் தான் உள்ளனர். அதாவது 16 சதவீதம் தெருக்களில் தான் இந்த தொற்று உள்ளது. 84 சதவீதம் தெருக்களில் நோய் தொற்று இல்லை.
தற்போது 4 ஆயிரத்து 404 தெருக்களில்தான் கொரோனா தொற்று உள்ளது.
மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி 16 சதவீத தெருக்களிலும் பாதிப்பை குறைத்து விடுவோம். தேவையில்லாமல் மக்கள் பீதியடைய வேண்டாம்.சென்னையில் தொற்று மேலும் பரவாமல் தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
நேரு நகர் பகுதியில் உள்ள சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் நடமாடும் கொரோனா பரிசோதனை மையத்தை பார்வையிட்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கொரோனா தொற்று அதிகம் உள்ள தண்டையார்பேட்டை பகுதியில் உள்ள பொதுமக்களை சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளோம். சென்னையில் வசிப்பவர்களுக்கு 52 லட்சம் முககவசங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் தெருவாரியாக எத்தனை பேருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளது என்று கணக்கெடுக்கப்படுகிறது. சென்னையில் 39 ஆயிரத்து 539 தெருக்கள் உள்ளது. இதில் பாதிக்கப்பட்ட 20 ஆயிரம் பேர், 6 ஆயிரத்து 537 தெருக்களில் தான் உள்ளனர். அதாவது 16 சதவீதம் தெருக்களில் தான் இந்த தொற்று உள்ளது. 84 சதவீதம் தெருக்களில் நோய் தொற்று இல்லை.
தற்போது 4 ஆயிரத்து 404 தெருக்களில்தான் கொரோனா தொற்று உள்ளது.
மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி 16 சதவீத தெருக்களிலும் பாதிப்பை குறைத்து விடுவோம். தேவையில்லாமல் மக்கள் பீதியடைய வேண்டாம்.சென்னையில் தொற்று மேலும் பரவாமல் தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X