என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருச்சி மத்திய சிறையில் கைதிகள் தயாரித்த முகக்கவசம் விலை பாதியாக குறைப்பு
Byமாலை மலர்6 Jun 2020 1:01 PM GMT (Updated: 6 Jun 2020 1:01 PM GMT)
திருச்சி மத்திய சிறையில் கைதிகள் தயாரித்த முகக்கவசம் விலை பாதியாக குறைக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் திருச்சி மத்திய ஜெயிலில் 50 ஆயிரம் முகக்கவசங்கள் கையிருப்பு உள்ளது.
திருச்சி:
திருச்சி மத்திய சிறையில் 1500-க்கும் மேற்பட்ட விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களின் மன அழுத்தத்தை குறைக்க சிறைக்குள் அதிகாரிகள் சோப்பு தயாரித்தல், அட்டைபெட்டி தயாரித்தல் போன்ற பல்வேறு கைத்தொழில்களில் கைதிகளை ஈடுபடுத்தி வருகின்றனர். மேலும் நன்னடத்தை அடிப்படையில் ஜெயில் வளாகத்தில் காய்கறிகள் பயிரிடுதல், கரும்புசாகுபடி, மீன் வளர்த்தல் போன்ற வேளாண் தொழில்களிலும் கைதிகள் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
கொரோனா வைரஸ் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்ததையடுத்து திருச்சி, புழல், வேலூர், கடலூர், மதுரை, பாளையங்கோட்டை, கோவை ஆகிய மத்திய ஜெயில்களில் முகக்கவசம் தயரிக்கும் பணிகள் புதிதாக தொடங்கப்பட்டன. திருச்சி மத்திய ஜெயிலில் 30-க்கும் மேற்பட்ட கைதிகள் இதில் ஈடுபட்டனர். அவர்கள் தினமும் முகக்கவசம் தயாரித்து வருகின்றனர்.
ஆரம்பத்தில் ஒரு முகக்கவசம் ரூ.10 விலை நிர்ணயம் செய்து விற்கப்பட்டது. தற்போது வெளியிடங்களில் உற்பத்தி அதிகரித்து விலை குறைக்கப்பட்டு வருவதால் ஜெயிலில் கைதிகள் உற்பத்தி செய்யும் முகக்கவசங்களும் பாதியாக விலை குறைக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில் திருச்சி மத்திய ஜெயிலில் 50 ஆயிரம் முகக்கவசங்கள் கையிருப்பு உள்ளதாகவும், அதனை மொத்தமாகவோ, சில்லறைக்கோ விற்க தயாராக இருப்பதாகவும் சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருச்சி மத்திய சிறையில் 1500-க்கும் மேற்பட்ட விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களின் மன அழுத்தத்தை குறைக்க சிறைக்குள் அதிகாரிகள் சோப்பு தயாரித்தல், அட்டைபெட்டி தயாரித்தல் போன்ற பல்வேறு கைத்தொழில்களில் கைதிகளை ஈடுபடுத்தி வருகின்றனர். மேலும் நன்னடத்தை அடிப்படையில் ஜெயில் வளாகத்தில் காய்கறிகள் பயிரிடுதல், கரும்புசாகுபடி, மீன் வளர்த்தல் போன்ற வேளாண் தொழில்களிலும் கைதிகள் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
கொரோனா வைரஸ் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்ததையடுத்து திருச்சி, புழல், வேலூர், கடலூர், மதுரை, பாளையங்கோட்டை, கோவை ஆகிய மத்திய ஜெயில்களில் முகக்கவசம் தயரிக்கும் பணிகள் புதிதாக தொடங்கப்பட்டன. திருச்சி மத்திய ஜெயிலில் 30-க்கும் மேற்பட்ட கைதிகள் இதில் ஈடுபட்டனர். அவர்கள் தினமும் முகக்கவசம் தயாரித்து வருகின்றனர்.
ஆரம்பத்தில் ஒரு முகக்கவசம் ரூ.10 விலை நிர்ணயம் செய்து விற்கப்பட்டது. தற்போது வெளியிடங்களில் உற்பத்தி அதிகரித்து விலை குறைக்கப்பட்டு வருவதால் ஜெயிலில் கைதிகள் உற்பத்தி செய்யும் முகக்கவசங்களும் பாதியாக விலை குறைக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில் திருச்சி மத்திய ஜெயிலில் 50 ஆயிரம் முகக்கவசங்கள் கையிருப்பு உள்ளதாகவும், அதனை மொத்தமாகவோ, சில்லறைக்கோ விற்க தயாராக இருப்பதாகவும் சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X