search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ் பரிசோதனை
    X
    கொரோனா வைரஸ் பரிசோதனை

    தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,458 பேருக்கு கொரோனா: உச்சக்கட்டமாக 19 பேர் உயிரிழப்பு

    தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,458 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.
    சென்னை:

    தமிழகத்தில் கடந்த ஆறு நாட்களாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது. இந்நிலையில் 7வது நாளாக இன்றும் ஆயிரத்தை தாண்டியுள்ளது.

    இன்று ஒரே நாளில் 1,458 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 30,152 ஆக உயர்ந்துள்ளது.

    இன்று 633 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 16,395 ஆக உயர்ந்துள்ளது.

    இன்று 19 பேர் உயிரிழந்துள்ளதால் மொத்த எண்ணிக்கை 251 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 1146 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 28,694 இருந்து 30,152 ஆக அதிகரித்துள்ளது.
    Next Story
    ×