என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பால் வியாபாரி, மனைவிக்கு கத்தி வெட்டு- 8 பேர் கைது
Byமாலை மலர்6 Jun 2020 12:02 PM GMT (Updated: 6 Jun 2020 12:02 PM GMT)
ராணிப்பேட்டையில் பால் வியாபாரி, மனைவி இருவரும் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக பெண்கள் உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
சிப்காட்(ராணிப்பேட்டை):
ராணிப்பேட்டை சங்கர்நகர் பகுதியைச் சேர்ந்தவர் அப்துல்லா, பால் வியாபாரி. இவருடைய மனைவி ஜெரீனா. இருவரும் நேற்று முன்தினம் வீட்டில் இருந்தனர். குடும்ப பிரச்சினையால், அதேபகுதியைச் சேர்ந்த உறவினர்கள் யாசின், ஆதம், ஆமின், அப்துல்காதர், பேகம்பீ, ஆமீனாபீ, பாமிதா பீ, பர்சானா ஆகியோர் அப்துல்லா வீட்டுக்குள் புகுந்து தகாத வார்த்தைகளால் திட்டி, அவரை கீழே தள்ளி கையால் தாக்கி உள்ளனர்.
தகராறை தடுக்க வந்த அப்துல்லாவின் மனைவி ஜெரீனாவை, தாங்கள் கையில் வைத்திருந்த கத்தியால் தலையில் வெட்டினர். மேலும் ஜெரீனாவின் கையை உடைத்து, உங்களை ஒழிக்காமல் விடமாட்டோம், எனக் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதையடுத்து காயம் அடைந்த ஜெரீனா சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அப்துல்லா ராணிப்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து யாசின், பர்சானா, ஆதம், ஆமின், அப்துல்காதர், பேகம்பீ, ஆமீனாபீ, பாமிதாபீ ஆகிய 8 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஜெரீனா மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ராணிப்பேட்டை சங்கர்நகர் பகுதியைச் சேர்ந்தவர் அப்துல்லா, பால் வியாபாரி. இவருடைய மனைவி ஜெரீனா. இருவரும் நேற்று முன்தினம் வீட்டில் இருந்தனர். குடும்ப பிரச்சினையால், அதேபகுதியைச் சேர்ந்த உறவினர்கள் யாசின், ஆதம், ஆமின், அப்துல்காதர், பேகம்பீ, ஆமீனாபீ, பாமிதா பீ, பர்சானா ஆகியோர் அப்துல்லா வீட்டுக்குள் புகுந்து தகாத வார்த்தைகளால் திட்டி, அவரை கீழே தள்ளி கையால் தாக்கி உள்ளனர்.
தகராறை தடுக்க வந்த அப்துல்லாவின் மனைவி ஜெரீனாவை, தாங்கள் கையில் வைத்திருந்த கத்தியால் தலையில் வெட்டினர். மேலும் ஜெரீனாவின் கையை உடைத்து, உங்களை ஒழிக்காமல் விடமாட்டோம், எனக் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதையடுத்து காயம் அடைந்த ஜெரீனா சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அப்துல்லா ராணிப்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து யாசின், பர்சானா, ஆதம், ஆமின், அப்துல்காதர், பேகம்பீ, ஆமீனாபீ, பாமிதாபீ ஆகிய 8 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஜெரீனா மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X