என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
குலசேகரம் அருகே தோட்ட தொழிலாளி மர்ம மரணம்
திருவட்டார்:
குலசேகரத்தை அடுத்த மணியங்குழி, வலியமலை பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் குமார் (வயது 35).
இவருக்கு திருமணமாகி மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர். சுரேஷ் குமார் மலைகிராமத்தில் உள்ள தோட்டத்தில் விவசாய வேலை செய்து வந்தார்.
நேற்று முன்தினம் காலையில் வீட்டில் இருந்து வேலைக்கு சென்றார். அன்று மாலை அவர் வீடு திரும்பவில்லை. இதனால் மனைவியும், குழந்தைகளும் அவரை தேடினர். எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதையடுத்து நேற்று காலையில் கணவரை தேடி அவரது மனைவி மலைகிராமத்திற்கு சென்றார். அங்குள்ள ஒரு ரப்பர் தோட்டத்தில் உள்ள 10 அடி ஆழ குழியில் சுரேஷ் குமார் பிணமாக கிடந்தார்.
இதை கண்ட அவரது மனைவி கதறி அழுதார். மேலும் இது பற்றி குலசேகரம் போலீசாருக்கும் தகவல் கொடுத்தார். சப்-இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.
போலீசார் சுரேஷ் குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சுரேஷ் குமார் எப்படி இறந்தார்? அவரது சாவில் மர்மம் உள்ளதா? என்பது பற்றி குலசேகரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்