search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேங்காய் பருப்பு ஏலம்
    X
    தேங்காய் பருப்பு ஏலம்

    பரமத்தி வேலூரில் ரூ.6½ லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்

    பரமத்தி வேலூரில் தேங்காய் பருப்பு ஏலம் விடப்பட்டதில் மொத்தம் ரூ.6 லட்சத்து 57 ஆயிரத்து 852-க்கு வர்த்தகம் நடைபெற்றதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
    பரமத்தி வேலூர்:

    பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் விளையும் தேங்காய்களை உடைத்து அதன் பருப்புகளை உலர்த்தி விவசாயிகள் வியாழக்கிழமை தோறும் பரமத்தி வேலூர் வெங்கமேட்டில் உள்ள பரமத்தி வேலூர் மின்னணு தேசிய வேளாண்மை சந்தைக்கு கொண்டு வருகின்றனர். இங்கு தரத்திற்கு தகுந்தார்போல் மறைமுக ஏலம் விடப்படுகிறது.

    கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு 15 ஆயிரத்து 776 கிலோ தேங்காய் பருப்பு கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.90.49-க்கும், குறைந்தபட்சமாக ரூ.82.89-க்கும், சராசரியாக ரூ.86.69-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.12 லட்சத்து 90 ஆயிரத்து 790-க்கு வர்த்தகம் நடைபெற்றது.

    நேற்று முன்தினம் நடைபெற்ற ஏலத்திற்கு 8 ஆயிரத்து 779 கிலோ தேங்காய் பருப்பு கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.91.29-க்கும் குறைந்தபட்சமாக ரூ.83.61-க்கும், சராசரியாக ரூ.86.61-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.6 லட்சத்து 57 ஆயிரத்து 852-க்கு வர்த்தகம் நடைபெற்றதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×