search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உயிரிழப்பு
    X
    உயிரிழப்பு

    கிணற்றில் குளிக்க சென்றபோது பிளஸ்-2 மாணவர் நீரில் மூழ்கி பலி

    மேலூர் அருகே கிணற்றில் குளிக்க சென்றபோது பிளஸ்-2 மாணவர் நீரில் மூழ்கி பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மேலூர்:

    மேலூர் அருகே உள்ள தெற்குதெரு கிராமத்தை சேர்ந்தவர் பூமிநாதன். இவரது மகன் ஹரிபிரசாத்(வயது 18). அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து பொதுத்தேர்வு எழுதி இருந்தார்.

    இந்தநிலையில் மாணவர் ஹரிபிரசாத், நண்பர்களுடன் கிணற்றில் குளிக்க சென்றார். அப்போது கிணற்றின் மேல் இருந்து குதித்து குளித்தபோது எதிர்பாராதவிதமாக அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் மேலூர் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று கிணற்றில் இருந்து மாணவர் உடலை மீட்டனர். மேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×