search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழக அமைச்சர் விஜய பாஸ்கர்
    X
    தமிழக அமைச்சர் விஜய பாஸ்கர்

    பிசிஜி தடுப்பூசி மூலம் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க அனுமதி பெற்றுள்ளோம்: விஜய பாஸ்கர்

    பிசிஜி தடுப்பூசி மூலம் வயதானவர்களுக்கு சிகிச்சை தருவதில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
    தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * பிசிஜி தடுப்பூசி மூலம் வயதானவர்களுக்கு சிகிச்சை தருவதில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது

    * பிளாஸ்மா, remdesivir மருந்துகளை தொடர்ந்து BCG தடுப்பூசி மூலம் கொரோனாவுக்கு சிகிச்சை

    * கொரோனா பாதிப்பு விவரங்களை சுகாதாரத்துறை வெளிப்படைத்தன்மையுடன் வெளியிடுகிறது

    * இறப்பு, பரிசோதனைகளை குறைத்துச் சொல்வதாக கூறுவது அடிப்படை ஆதாரமற்றது

    * கொரோனா பாதிப்பு விவரங்களை அரசு மறைக்கிறது என்ற குற்றச்சாட்டு ஏற்புடையதல்ல

    * கொரோனா வைரஸ் தொற்றை நாம் அரசியல் ஆக்கக்கூடாது. நம்முடைய அறிக்கைகள் கொரோனா போரில் முன் நின்று போரிடும் ஊழியர்களை உற்சாகப்படுத்த வேண்டும். அவர்களை காயப்படுத்தக் கூடாது. நாம் விமர்சனம் செய்யலாம். ஆனால் அதில் அரசியல் ஆதாயம் இருக்கக்கூடாது.

    இவ்வாறு விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×