search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    பேரளம் அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை

    பேரளம் அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நன்னிலம்:

    பேரளம் அருகே உள்ள சிறுபுலியூர் கீழத்தெருவை சேர்ந்தவர் கலியமூர்த்தி. இவரது மகன் சிலம்பரசன்(வயது29). விவசாயி. இவர் அடிக்கடி வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்தார். சம்பவத்தன்று வயிற்றுவலி அதிகமானதால் அரளிவிதையை(விஷம்) அரைத்து குடித்தார். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று சிலம்பரசன் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து சிலம்பரசனின் மனைவி பரிமளா பேரளம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×