search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
    X
    தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

    சென்னையில் கொரோனா தடுப்பு பணிக்கு 5 அமைச்சர்கள் நியமனம்

    சென்னையில் கொரோனா தடுப்பு பணிக்கு 5 அமைச்சர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அதில் ஜெயக்குமார் உள்பட ஐந்து அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர்.
    சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த 5 அமைச்சர்கள் கொண்ட குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாகச் சென்னையில் கடந்த சில நாட்களாக நாள்தோறும் 1000-ஐ கடந்து பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதுவரை சென்னையில் மொத்தம் 18,693 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 3,388 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில் சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த 5 அமைச்சர்கள் கொண்ட குழுவை அமைத்து முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அமைச்சர்கள் ஜெயக்குமார். கே.பி. அன்பழகன், காமராஜ், உதயகுமார், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

    * மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம் ஆகிய மண்டலங்களுக்கு அமைச்சர் ஜெயக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

    * அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் ஆகிய மண்டலங்களுக்கு அமைச்சர் கே.பி.அன்பழகன் நியமிக்கப்பட்டுள்ளார்.

    * தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம் ஆகிய மண்டலங்களுக்கு அமைச்சர் காமராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.

    * திருவொற்றியூர், மணலி, திரு.வி.க.நகர் ஆகிய மண்டலங்களுக்கு அமைச்சர் உதயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

    *அம்பத்தூர், வளசரவாக்கம், ஆலந்தூர், ஆகிய மண்டலங்களுக்கு எம்.ஆர்.விஜயபாஸ்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.
    Next Story
    ×