என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
ராஜபாளையம் அருகே மில் தொழிலாளி வெட்டிக்கொலை
ராஜபாளையம்:
ராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரம் மாஞ்சோலை காலனியைச் சேர்ந்தவர் இசக்கிமுத்து (வயது28), மில் தொழிலாளி. இவருக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.
நேற்று இரவு 11.30 மணிக்கு ஊருக்கு வெளியில் திறந்தவெளி கழிப்பிடத்திற்கு இசக்கிமுத்து சென்றார். அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை.
இந்த நிலையில் இன்று காலை அங்குள்ள காட்டுப் பகுதியில் இசக்கிமுத்து பிணமாக கிடப்பதை அந்த வழியே சென்றவர்கள் பார்த்தனர். இதுகுறித்து தளவாய்புரம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் முத்துக் குமரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
இசக்கிமுத்து உடலில் ஏராளமான அரிவாள் வெட்டு காணப்பட்டது. எனவே அவரை கும்பலாக சேர்ந்து சிலர் வெட்டிக் கொலை செய்து இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.
பிரேத பரிசோதனைக்காக இசக்கிமுத்து உடல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவரை வெட்டி கொலை செய்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து தீவிர விசாரணை நடக்கிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்