என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சென்னை விமான நிலைய ஆணையக அதிகாரிக்கு கொரோனா தொற்று
Byமாலை மலர்5 Jun 2020 4:05 AM GMT (Updated: 5 Jun 2020 4:05 AM GMT)
சென்னை விமான நிலைய ஆணையக அதிகாரிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து நிர்வாக அலுவலகம் 7-ந் தேதி வரை மூடப்பட்டது.
சென்னை:
சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய நிர்வாக அலுவலகம் விமான நிலையத்தின் அருகே செயல்பட்டு வந்தது. 3 தளங்கள் கொண்ட இந்த அலுவலகம் கட்டிடத்தின் 2வது தளத்தில் மின்சார பராமரிப்பு, அக்கவுண்டஸ், சிவில் ஆகிய 3 பிரிவுகள் உள்ளன.
இந்தநிலையில் விமான நிலைய நிர்வாக அலுவலகத்தில் உள்ள மின்சார பராமரிப்பு பிரிவு அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அவர், மணப்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அங்கு பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர்.
இதையடுத்து 2வது தளத்தில் உள்ள 3 பிரிவுகளும் நேற்று மாலையில் இருந்து 7ந் தேதி வரை மூடப்படுவதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். விமான நிலைய நிர்வாக அலுவலகம் முழுவதையுமே தற்காலிகமாக மூடி கிருமிநாசினி மருந்துகள் தெளித்து சுத்தப்படுத்த வேண்டும் என்பதால் தற்காலிகமாக மூடப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் சென்னை விமான நிலைய ஆணையக டிரைவர் ஒருவருக்கும் நேற்று கொரோனா தொற்று ஏற்பட்டு சென்னை வானகரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய நிர்வாக அலுவலகம் விமான நிலையத்தின் அருகே செயல்பட்டு வந்தது. 3 தளங்கள் கொண்ட இந்த அலுவலகம் கட்டிடத்தின் 2வது தளத்தில் மின்சார பராமரிப்பு, அக்கவுண்டஸ், சிவில் ஆகிய 3 பிரிவுகள் உள்ளன.
இந்தநிலையில் விமான நிலைய நிர்வாக அலுவலகத்தில் உள்ள மின்சார பராமரிப்பு பிரிவு அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அவர், மணப்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அங்கு பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர்.
இதையடுத்து 2வது தளத்தில் உள்ள 3 பிரிவுகளும் நேற்று மாலையில் இருந்து 7ந் தேதி வரை மூடப்படுவதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். விமான நிலைய நிர்வாக அலுவலகம் முழுவதையுமே தற்காலிகமாக மூடி கிருமிநாசினி மருந்துகள் தெளித்து சுத்தப்படுத்த வேண்டும் என்பதால் தற்காலிகமாக மூடப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் சென்னை விமான நிலைய ஆணையக டிரைவர் ஒருவருக்கும் நேற்று கொரோனா தொற்று ஏற்பட்டு சென்னை வானகரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X